ஜோர்ஜ் டேனர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோர்ஜ் டேனர் அல்லது ஜோர்ஜ் ரேனர்(George Turnour) என்பவர் மகாவம்சம் நூலை, பாளி மொழியில் இருந்து ஆங்கிலம் மொழிக்கு முதல் மொழிப்பெயர்ப்பு செய்தவர் ஆவார். இவர் இலங்கையில் பிரித்தானியர் ஆட்சி நிலவியப் பொழுது, சிலோன் சமூகப் பணியகத்தில் பணிப்புரிந்த ஒரு பிரித்தானிய சமூக பணியாளரும் வரலாற்றாசிரியரும் ஆவார்.
இவர் மகாவம்சம் நூலை 1837ம் ஆண்டு வெளியிட்டார்.[1] இவரின் இச்செயலின் நினைவாகவே கொழும்பு வேத்தியர் கல்லூரியில் டேனர் பரிசு எனும் கௌரப் பட்டம் வழங்கல் அறிமுகமாகியது.