இடும்பாவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இடும்பாவனம்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவாரூர்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்614703

இடும்பாவனம் (Idumbavanam) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், இடும்பாவனம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான திருவாரூரிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், முத்துப்பேட்டையிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 353 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு[தொகு]

இந்த கிராமத்தில் 2127 வீடுகள் உள்ளன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 7345 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 3730 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 3615 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 67.2 % ஆகும். இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[1]

தொடருந்து நிலையம்[தொகு]

அருகில் உள்ள தொடருந்து நிலையம் தில்லைவிளாகம் தொடருந்து நிலையம் ஆகும்.

கோயில்கள்[தொகு]

இந்த ஊரில் பாடல் பெற்றத் தலமான இடும்பாவனம் சற்குணேசுவரர் கோயில் உள்ளது.

மேற்கோள்[தொகு]

  1. "Idumbavanam Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-11-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடும்பாவனம்&oldid=3859512" இலிருந்து மீள்விக்கப்பட்டது