1950 ஃபிஃபா உலகக்கோப்பை, 1950ஆம் ஆண்டு சூன் 24 முதல் சூலை 16 வரை பிரேசிலில் நடைபெற்ற நான்காவது உலகக்கோப்பை காற்பந்து போட்டியாகும். 1938ஆம் ஆண்டிற்கு பிறகு இரண்டாம் உலகப் போரால் 1942இலும் 1946இலும் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறவில்லை. எனவே 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற முதல் உலகக்கோப்பை போட்டியாக இது அமைந்தது. இந்தப் போட்டியில் உருகுவே கால்பந்தாட்ட அணி இறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல்கணக்கில் போட்டி நடத்திய பிரேசில் நாட்டு அணியை வென்று கோப்பையை கைப்பற்றிது. இந்தப் போட்டியின்போது தான் உலகக்கோப்பை போட்டி வெற்றியாளருக்கு வழங்கப்படும் கோப்பைக்கு ஃபிஃபா தலைவராக 25 ஆண்டுகள் பணியாற்றியதைப் பாராட்டும் விதமாக ஜூல்சு ரிமெட் கோப்பை என பெயரிடப்பட்டது.