விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஜனவரி 18, 2011
- நூர் இனாயத் கான் (படம்) என்ற இந்திய முஸ்லிம் இனத்துப் பெண் பிரித்தானியாவின் சிறப்பு உளவுப் பிரிவில் பணியாற்றியவர். 1944 இல் செருமனி டேச்சு நாட்சி வதை முகாமில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- சென்னையில் உள்ள தி.நகர் பிட்டி தியாகராயர் நினைவாகவும் பாண்டி பசார் டபிள்யூ. பி. ஏ. சௌந்திரபாண்டியன் நாடார் நினைவாகவும் பெயரிடபட்டவை.
- தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை வ. வே. சு. ஐயரின் குளத்தங்கரை அரசமரம்.
- தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சர் ருக்மிணி லட்சுமிபதி.
- முடக்கு வாதத்தால், தன் விரல்களை நேராக நீட்டவியலாத பன்னாட்டு துடுப்பாட்ட நடுவர் பில்லி பௌடன் மட்டையாளர்களை ஆட்டத்திலிருந்து வெளியேற்ற தன் ஆள்காட்டி விரலைக் குறுக்கி சைகை செய்கிறார்.