ஹர்பால் திவானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹர்பால் சிங் திவானா (Harpal Singh Tiwana) (8 ஆகத்து 1935 - 19 மே 2002) இவர் ஒரு இந்திய நாடக ஆசிரியரும், திரைப்பட மற்றும் நாடக இயக்குனரும் ஆவார். இவர் பஞ்சாபி மொழி நாடகங்களுக்கும் திரைப்படங்களுக்கும் பெயர் பெற்றவர். [1]

தொழில்[தொகு]

லாங் டா லிஷ்கரா மற்றும் திவா பேல் சாரி ராத் ஆகிய திரைப்பட தயாரிப்பில் இவர் மேற்கொண்ட இரண்டு முயற்சிகள் பஞ்சாபித் திரைப்படத்துறையின் அடையாளங்களாக அமைந்தன. இவர் இரண்டு தொலைக்காட்சி தயாரிப்புகளையும் இயக்கியுள்ளார் - சஞ்சி தீவர், மகாராஜா ரஞ்சித் சிங் குறித்த முடிக்கப்படாத திட்டம் ஆகியவை.

இவரது பிரபலமான நாடகங்களில் சிர்ஹிந்த் தி தீவார் என்பதும் அடங்கும். [2] உள்ளூர் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக இவர் தனது மனைவியுடன் பாட்டியாலாவில் பஞ்சாப் கலா மஞ்ச் என்பதை நிறுவினார். [3] இவரும் இவரது மனைவி நீனா ஆகிய இருவரும் தேசிய நாடகப் பள்ளியில் பட்டம் பெற்றவர்கள். [4] இவரது மனைவி, இவரது மகன் மன்பால் திவானா ஆகியோரும் பஞ்சாபில் நாடகங்களை விளம்பரப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இவருக்கு லூனா திவானா என்ற மகளும் உள்ளார்.

இறப்பு[தொகு]

மே 19, 2002 அன்று இமாச்சல பிரதேசத்தின் பாலம்பூர் அருகே சாலை விபத்தில் இறந்தார். பாட்டியாலாவில் உள்ள பதுங்கர் தகன மைதானத்தில் தகனம் செய்யப்பட்டார். [5] இவரது மரணத்திற்குப் பிறகு அவரது நினைவாக ஹர்பால் திவானா அறக்கட்டளை அமைக்கப்பட்டது. [6]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹர்பால்_திவானா&oldid=3685169" இலிருந்து மீள்விக்கப்பட்டது