வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் நவம்பர் 2010
- நவம்பர் 14:
- ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்பு படுத்தப்பட்ட இந்தியத் தொலைத் தொடர்புத்துறை ஆய அமைச்சர் ஆ. ராசா, தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியின் அறிவுரையின்படி பதவிவிலகினார். (தி ஹிந்து நாளிதழ் செய்தி)
- நவம்பர் 6:
- ஈராக்கின் பக்தாத், கிர்க்குக் நகரங்களில் கார்க்குண்டுவெடிப்புகளில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டனர். (சீஎனென்)
- தென் கொரியா, சிங்கப்பூர் கப்பல்களைப் பிடித்து வைத்திருந்த சோமாலிய கடற்கொள்ளைக்காரர்கள் £7.6 மில்லியன் பணம் கப்பமாகப் பெற்றனர். (அல்ஜசீரா)
- உலகிலேயே மிகப்பெரிய இயேசு கிறித்து சிலை போலந்தில் அமைக்கப்பட்டது. (ஏபி)
- ஆத்திரேலியாவின் தூரமேற்கு ஆழ்கடலில் உயிருடன் எரிமலை கண்டுபிடிப்பு
- இரண்டாம் உலகப் போர்க்கால பெரும் இனவழிப்புப் புதைகுழி ருமேனியாவில் கண்டுபிடிப்பு
- நவம்பர் 5:
- பாகிஸ்தான் பெசாவரில் பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். (சின்குவா)
- இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளில் மெராப்பி எரிமலை தொடர்ந்து வெடித்ததில் இறந்தவர்களின் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்தது. (ஜகார்த்தா குளோப்)
- பாக்கித்தானில் கராச்சி விமான நிலையம் அருகே சிறிய ரக விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 22 பேரும் கொல்லப்பட்டனர். டைம்ஸ் ஆப் இந்தியா)
- கியூபாவில் விமானம் வீழ்ந்ததில் 68 பேர் உயிரிழந்தனர்.
- உருசிய உளவாளிகள் பலர் ஜோர்ஜியாவில் கைது செய்யப்பட்டனர்.
- ஆத்திரேலியாவில் ஒரு நாள் துடுப்பாட்டத் போட்டித்தொடரை முதற்தடவையாக இலங்கை வென்றது.
- நவம்பர் 4:
- பாகிஸ்தான் வரிச்சித்தானில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் 13 போராளிகள் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பாதுகாப்பு, அணுசக்தி ஒப்பந்தங்கள்
- ஆத்திரேலிய விமானம் இயந்திரக் கோளாறினால் சிங்கப்பூரில் அவசரமாகத் தரையிறங்கியது.
- நவம்பர் 3:
- வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு அஞ்சல் குண்டுகள் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து தனது சகல வான்வெளி அஞ்சல் சேவைகளையும் கிரேக்கம் இடைநிறுத்தியுள்ளது. (பிபிசி)
- பாக்தாத் நகரில் இடம்பெற்ற 17 தொடர் குண்டுவெடிப்புகளில் 113 பேர் கொல்லப்பட்டனர். (சின்குவா)
- கொசோவோ அரசு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வி.
- சேர்பியாவில் நிலநடுக்கம், இருவர் உயிரிழப்பு.
- நவம்பர் 2:
- இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பாரவுந்து ஒன்று கவிழ்ந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். (பிடிஐ)
- இந்தோனேசியாவின் ஜாவா தீவில் மெராப்பி எரிமலை தொடர்ந்து வெடித்ததில் வான் போக்குவரத்துகள் தடைப்பட்டன. (ஏபி)
- சர்ச்சைக்குரிய குரீல் தீவுகளுக்கு உருசிய அதிபர் பயணம்.
- நவம்பர் 1:
- சோமாலியாவில் அல்-சபாப் போராளிகளுக்கும் அரசு சார்புப் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
- இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் மூரி கங்கை ஆற்றில் படகு ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது 50 பேர் உயிரிழந்தனர். (சிட்னி மோர்னிங் எரால்ட்)
- பிரேசிலின் முதலாவது பெண் அரசுத்தலைவராக டில்மா ரூசெப் தெரிவானார்.
- பாக்தாத் பணயக் கைதிகளை விடுவிக்கும் முயற்சியில் குறைந்தது 52 பேர் கொல்லப்பட்டனர்.