வலைவாசல்:வைணவம்/வைணவ அடியார்/10

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீராபாய்

மீரா (மீராபாய் கி.பி 1498 – கி.பி 1547) ஒரு வைணவ மத பக்தி பாடகர் ஆவார். இவர் கிருஷ்ணர் மீது தீவிர பற்று கொண்டவர். மீரா ராஜபுத்திரரின் இளவரசி ஆவர், இவர் தற்போதைய ராஜஸ்தானில் பிறந்தவர்.

பக்தி நெறியில் தீவிர பற்று கொண்ட இவர் , கிருஷ்ணரின் மீது இயற்றிய பஜன்கள், இந்தியாவைத் தாண்டி உலகெங்கிலும் புகழ்பெற்றவை. இவர் குரு ரவிதாசரின் சீடராவார்.அரச குடும்பத்தைச் சார்ந்த இவர் வைணவ சமய மரபில் வளர்க்கப்பட்டார். கிருஷ்ணரிடம் மிகுந்த ஈடுபாடு குழந்தைப் பருவம் முதலே ஏற்பட்டது. தம் கருத்துகளை வட்டார மொழியான ‘பிரிஜ்’ மொழியில் பரப்பினார். பிறப்பு, இறப்பு என்னும் சுழற்சியினின்று விடுபட்டு பேரின்ப நிலையை அடைய கிருஷ்ணபக்தி அவசியம் என்றார். இவரது பக்திப்பாடல்கள் இனிமையானவை. பக்தி நெறியைச் சுவையான பாடல்கள் வாயிலாகப் பரப்பினர். எளிய பக்தியும், நம்பிக்கையுமே வீடு பேற்றினை அடைய நல்வழி என்றார். பிறப்பால் எவரும் உயர்ந்தவர் இல்லை. உயர்விற்கு காரணம் “செயல்” என்னும் கருத்தைப் பரப்பினார்.