ரைவத மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரைவதம் அல்லது ரைவத மலை (Raivataka), இந்திய இதிகாசம் மற்றும் புராணங்களில் குறிப்பிட்ட மலை ஆகும். மகாபாரத இதிகாசத்தின் ஆதி பருவம் 217வது அத்தியாயத்தில் சுலோகம் எண் 8ல் ரைவத மலையைக் குறித்துள்ளது.[1]மேலும் ஹரிவம்ச புராணத்தில் 2.55.111ல் ரைவத மலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளது.[2]மகாபாரத காவியத்தில் ரைவத மலை, ஆனர்த்த இராச்சியத்தில் இருந்ததாக குறிப்பிட்டுள்ள்து. ஹரிவம்ச புராணத்தில் ரைவத நாட்டரசரின் இம்மலை விளையாட்டுத் தலமாகவும், (2.56.29); கடவுளர்களின் வாழிடமாகவும் (2.55.111) குறிப்பிட்டுள்ளது. துவாரகையின் யாதவ மக்கள் ரைவத மலையை வணங்கி பெரிய விழாவாக கொண்டாடியதாக குறிப்பிட்டுள்ளது.

அமைவிடம்[தொகு]

ரைவத மலையை தற்போது குஜராத் மாநிலத்தின் ஜூனாகத் மாவட்டத்தின் தலைமையிடமான ஜூனாகத் நகரத்திற்கு கிழக்கே உள்ள கிர்நார் மலையாக மக்கள் கூறுகிறார்கள். [3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Adi Parva, chapter 217, verse 8
  2. Shanti Lal Nagar (editor) Harivamsa Purana Vol. 2 p.551
  3. Vittam Mani Puranic Encyclopaedia, p.626
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரைவத_மலை&oldid=3616904" இலிருந்து மீள்விக்கப்பட்டது