மாவட்ட கால்நடை பண்ணை, செட்டிநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாவட்ட கால்நடை பண்ணை, செட்டிநாடு என்பது தமிழ்நாடின், சிவகங்கை மாவட்டம், செட்டிநாட்டில் உள்ள ஒரு கால்நடைப் பண்ணையாகும். இந்தப் பண்ணையானது 1957-ஆம் ஆண்டு 1,907.32 ஏக்கர் பரப்பளவில் துவக்கப்பட்டது.[1] இதில் 300 ஏக்கரில் மானாவாரி ஆராய்ச்சி நிலையம், 30 ஏக்கரில் தேசிய திறந்தவெளி சேமிப்புக் கிடங்கு இயங்கிவருகின்றன. மீதமுள்ள இடமானது கால்நடைப் பண்ணைக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.[2] இப்பண்ணையில், ஜெர்சி கலப்பினம், தார்பார்கர் மாடு போன்ற மாட்டினங்களும், இராமநாதபுரம் வெள்ளை செம்மறியாடுகள், ஜமுனாபாரி வெள்ளாடுகள், லார்ஜ் ஒயிட் யார்க்‌ஷயர் பன்றி இனம் ஆகியவை வளர்க்கப்படுகின்றன.[3] இங்கு வளர்க்கப்படும் இந்த கால்நடைகளின் கன்றுகள் அரசு நிர்ணயித்த விலைக்கு விவசாயிகளுக்கு விற்கப்படுகிறன்றன. தமிழ்நாட்டில் உள்ள அரசு கால்நடைப் பண்ணைகளில் தார்பார்கர் மாடுகள் பண்ணையில் மட்டுமே உள்ளதால், அவை இங்கு மட்டுமே கிடைக்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. சுப. ஜனநாயகச்செல்வம் (8 சூலை 2015). "செட்டிநாடு அரசு கால்நடைப் பண்ணையில் ராஜஸ்தான் தார்பார்கர் இன பசுமாடுகள்: விவசாயிகள் வரவேற்பு". செய்தி. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 9 மே 2019.
  2. "செட்டிநாடு கால்நடை பண்ணை மருத்துவ கல்லூரியாக மாறுமா? புல் வளர்ப்பு கூடமாகவே தொடரும் அவலம்". செய்திக் கட்டுரை. தின மலர். 7 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 9 மே 2019.
  3. "கொள்கை விளக்கக் குறிப்பு 2009-2010" (PDF). கால்நடை பராமரிப்புத் துறை. பார்க்கப்பட்ட நாள் 8 மே 2019.