உள்ளடக்கத்துக்குச் செல்

மரியம் உசு-சமானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரியம் உசு-சமானி பேகம் சாகிபா
مریم الزمانی بیگم صاحبہ
முகலாயப் பேரரசி
மரியம் உசு-சமானியின் ஓவியம்
துணைவர்சலாலுதீன் முகமது அக்பர்
முழுப்பெயர்
இராசகுமாரி ஈரா குன்வாரி
அரச குலம்முகலாயர்
தந்தைபார்மல்
பிறப்புஅக்டோபர் 1, 1542
அமேர்
இறப்பு1622
அடக்கம்மரியத்தின் கல்லறை
சமயம்இந்து

மரியம் உசு-சமானி பேகம் சாகிபா அல்லது இராசகுமாரி ஈரா குன்வாரி அல்லது உருக்மாவதி சாகிபா அல்லது அர்கா பாய் (मारियम उज़-ज़मानी बेगम साहिबा அல்லது राजकुमारी हिरा कुंवरी அல்லது रुक्मावती साहिबा அல்லது हर्खाबाई, பாரசீகம்: مریم الزمانی بیگم صاحبہ) என்பவர் முகலாயப் பேரரசரான அக்பரைத் திருமணம் செய்த பின்பு, முகலாயப் பேரரசி ஆன இராசபுத்திர இளவரசி ஆவார். மரியம் உசு-சமானி ஆம்பெரின் அரசரான பிஹரி மாலின் மூத்த மகளான ஹர்கா பாய் என்ற எயரில் பிறந்தார்.[1] இவர் பேரரசர் சகாங்கீரின் தாயும் ஆவார்.[2]

முகலாய வரலாற்றில் இவர் பெயர் மரியம் உசு-சமானி என்றே பதிவாகியுள்ளது. இதனாலேயே இலாகூரின் அரணமைக்கப்பட்ட நகரத்தில் (இப்போது பாக்கித்தானில் அமைந்துள்ளது.) மரியம் சமானி பேகத்தின் பெயரால் பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட்டுள்ளது.[3] இந்தப் பள்ளிவாசல் மரியம் உசு-சமானியின் மகனான சகாங்கீரால் கட்டப்பட்டது.

வாழ்க்கை

[தொகு]

இராசகுமாரி ஈரா குன்வாரி பேரரசர் அக்பரை பெப்ரவரி 6, 1562 இல் இந்தியாவில் இராச்சசுத்தானிலுள்ள சம்பார் எனும் இடத்தில் திருமணம் செய்தார். இவர் பேரரசர் அக்பரின் மூன்றாவது மனைவியும் ஆவார். பேரரசர் அக்பரின் முதலாவது மனைவி உருக்காயா பேகம் , இரண்டாவது மனைவி சலீமா சுல்தான். திருமணத்தின் பின்பு, இராசகுமாரி ஈரா குன்வாரிக்கு மரியம் உசு-சமானி என்ற பெயர் வழங்கப்பட்டது.[4]

இவர் 1622 ஆம் ஆண்டு இறந்தார்.

சோதா பாய்

[தொகு]

பேரரசர் அக்பரின் மனைவி, சகாங்கீரின் தாய் சோதா பாய் என்று அறியப்பட்டதாகவும் ஒரு பார்வை உண்டு. சகாங்கீரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் துற்கு-இ-சகாங்கிரி என்ற நூலில் சோதா பாய் என்று யாருமே குறிப்பிடப்படவில்லை. அக்பர்நாமாவிலோ முகலாயர் கால வரலாற்றாதாரங்களிலோ மரியம் உசு-சமானிக்குச் 'சோதா பாய்' என்ற பெயர் பயன்படுத்தப்பட்டதாகத் தகவலில்லை.

சிரின் மூசுவியின் கருத்துப்படி, 18 ஆம், 19 ஆம் நூற்றாண்டுகளிலேயே வரலாற்று இலக்கியங்களில் பேரரசர் அக்பரின் மனைவியைக் குறிக்கச் 'சோதா பாய்' என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.[5] இம்தியாசு அகமதின் கருத்துப்படி, பேரரசர் அக்பரின் மனைவிக்குச் 'சோதா அக்பர்' எனும் பெயர் முதன்முறையாக அன்னல்சு அண்டு ஆண்டிக்குட்டீசு ஆப் இராச்சசுத்தான் என்ற நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

திரைப்படத்தில்

[தொகு]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ["'பரிமாற்றம், ஆக்கிரமிப்பு இந்தியாவுக்கு இசுலாத்தைக் கொண்டு வரவில்லை (ஆங்கில மொழியில்)'". Archived from the original on 2012-10-19. பார்க்கப்பட்ட நாள் 2012-07-21. 'பரிமாற்றம், ஆக்கிரமிப்பு இந்தியாவுக்கு இசுலாத்தைக் கொண்டு வரவில்லை (ஆங்கில மொழியில்)']
  2. "ஆக்ரா பற்றி (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-05-26. பார்க்கப்பட்ட நாள் 2012-07-21.
  3. மரியம் சமானிப் பள்ளிவாசல் (1614இல் கட்டப்பட்டது) (ஆங்கில மொழியில்)
  4. சோதாபாய் உண்மையாகவே இருந்தாரா (ஆங்கில மொழியில்)?
  5. ["அக்பர்-சோதாபாய் பற்றிய மீள்பார்வையில் உண்மைச் செய்தி, புனைவுக் கலப்பு (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-12-08. பார்க்கப்பட்ட நாள் 2012-07-21. அக்பர்-சோதாபாய் பற்றிய மீள்பார்வையில் உண்மைச் செய்தி, புனைவுக் கலப்பு (ஆங்கில மொழியில்)]
  6. ஐஸ்வர்யா ராய் ஹிருத்திக்ரோஷன் நடித்த 'ஜோதா அக்பர்' வசூலில் புதிய சாதனை!
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியம்_உசு-சமானி&oldid=4114886" இலிருந்து மீள்விக்கப்பட்டது