பேச்சு:சதரத்தின சங்கிரகம்
\\வடமொழிச் ’சமயங்களாகிய’ சுவாயம்புவம், நிச்சுவாசம், மதங்கம், தேவியாமதம், மிருகேந்திரம், கிரணம், பராக்கியம், தேவிகாலோத்தரம், விசுவசாரம், ஞானோத்தரம் ஆகிய ’நூல்’களிலிருந்து தொகுக்கப்பட்ட நூல்\\
- சுவாயம்புவம், நிச்சுவாசம், மதங்கம், தேவியாமதம், மிருகேந்திரம், கிரணம், பராக்கியம், தேவிகாலோத்தரம், விசுவசாரம், ஞானோத்தரம்-இவை சமயங்களா அல்லது நூல்களா?--Booradleyp (பேச்சு) 04:26, 15 திசம்பர் 2012 (UTC)
ஆம். இவை வடமொழி நூல்கள். --Sengai Podhuvan (பேச்சு) 05:15, 15 திசம்பர் 2012 (UTC)
சதம் என்றால் நூறு. சதரத்தின சங்கிரகம் எனபது சரி.கட்டுரையின் செய்திகளும் இதனையே கூறுகின்றன. எனவே இத்தலைப்பிற்கு நகர்த்தியுள்ளேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 05:27, 15 திசம்பர் 2012 (UTC)
- என் பேச்சுக் குறிப்பில் பிழை நேர்ந்துள்ளது. மன்னிக்கவும். பேச்சைத் திருத்தியுள்ளேன். பாருங்கள். எனவே நகர்த்தலை விலக்குங்கள். அன்புள்ள. --Sengai Podhuvan (பேச்சு) 05:35, 15 திசம்பர் 2012 (UTC)
- வணக்கம் ஐயா தாங்கள் எப்பிழையும் செய்யவில்லை. இது தட்டச்சுப் பிழை மட்டுமே. தங்களின் சிவப்பிரகாச உரை என்ற கட்டுரையிலும் 'சதரத்தின சங்கிரகம்' என்றே குறிப்பிட்டுள்ளீர்கள். எனவே தலைப்பு சரியாகவே நகர்த்தப்பட்டுள்ளது.
- பார்வதிசீர் அவர்களின் பாங்குக்கும் பணிக்கும் கடப்பாடு. நகர்த்தல் சரியே. அன்புள்ள. --Sengai Podhuvan (பேச்சு) 05:52, 15 திசம்பர் 2012 (UTC)
ஆகமம்[தொகு]
ஆகமம் என்றால் சமயம் அல்லவா? இங்கு குறிப்பிடப்படுவது சமய நூல்களாயின், சமய நூல்களெனக் குறிப்பிடலாமே. மற்றப்படி, ஆகமங்கள் என்றால் சமயங்கள் என்றுதானே பொருள்?--பாஹிம் (பேச்சு) 00:55, 16 திசம்பர் 2012 (UTC)
- பாருங்கள்: ஆகமம்.--Kanags \உரையாடுக 01:55, 16 திசம்பர் 2012 (UTC)