இந்த கிராமம் பெங்களூரின் புறநகரில் அமைந்துள்ளதால், நிலம் தொடர்பாக பல சட்டச் சிக்கல்கள் உள்ளன. [2] வேளாண் நிலங்களில் அமைக்கப்பட பல வீட்டுமனைத் திட்டங்கள் அகற்றப்பட்டன. [3] அரசு நிலங்கள், ஏரிகள், வனப்பகுதிகளில் அமைக்கப்பட்ட வீட்டுமனைகளை முறைப்படுத்த முயற்சி நடந்தது. [4] பெங்களூர் நகர மாவட்டத்தின் துணை ஆணையர் 285 ஏக்கர் நிலத்தை கோடாய் குழுமத்திற்கு முறேகேடாக வழங்கியுள்ளார் என்ற குற்றசாட்டு எழுந்தது. [5] மேலும் கர்நாடக அரசு இந்த உத்தரவைத் தடுக்க உயர்நீதிமன்றத்தை அணுகியது. [6] ஒரு காலத்தில் மயில்கள், மான்கள், முயல்கள், குள்ளநரிகள் போன்ற பலவிதமான உயிரினங்களின் வாழ்ந்த பகுதியாக இது இருந்தது. ஆனால், பெங்களூரின் தெற்கு பகுதியில் இப்பகுதியில் உள்ள பசுமையான காடுகள், பகைர் ஹூக்கும் நிலத் திட்டத்தால் கான்கிரீட் காடாக மாறியுள்ளது. அதன் வளமான தாவரங்களும், விலங்கினங்களும் ஆபத்துக்கு உள்ளாகியுள்ளன. [7] காட்டுத் தீ, விலங்குகளை வேட்டையாடுதல் போன்ற நிகழ்வுகள் அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பறவைநோக்கர்கள் நுழைவதை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பதற்காக ஆளில்லா வீனூர்திகளைப் பயன்படுத்துகின்றனர். [8][9] ரோரிச் எஸ்டேட்டில் ஒரு திரைப்பட நகரம் அமைக்க திட்டமிடப்பட்டது. [10] மேலும் உயர்நீதிமன்றம் அதற்கான நிலப்பரிமாற்ற செயல்முறையை தடுத்து. [11]