திருமுல்லவாரம் மகாவிஷ்ணு கோயில்
தோற்றம்
மகாவிஷ்ணு கோயில் | |
---|---|
![]() திருமுல்லவாரம் மகாவிஷ்ணு கோயில் | |
மகாவிஷ்ணு கோயில், திருமுல்லவாரம், கொல்லம் மாவட்டம், கேரளம் | |
புவியியல் ஆள்கூற்று: | 8°53′40″N 76°33′22″E / 8.8944°N 76.5560°E |
பெயர் | |
பெயர்: | மகாவிஷ்ணு கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருமுல்லவாரம் |
மாவட்டம்: | கொல்லம் |
மாநிலம்: | கேரளம் |
நாடு: | ![]() |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | மகாவிஷ்ணு |
சிறப்பு திருவிழாக்கள்: | வைகுண்ட ஏகாதசி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கேரளக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
திருமுல்லவாரம் மகாவிஷ்ணு கோயில் (Thirumullavaram Maha Vishnu Swamy temple) என்பது தென்னிந்தியாவின், கேரளத்தின், கொல்லம் நகர்புறத்தில் உள்ள ஒரு பெருமாள் கோயிலாகும். இக்கோயில் கொல்லத்தின் திருமுல்லவாரம் கடற்கரையில் அமைந்துள்ளது.[1]
இந்த இடமானது பரசுராமரால் புனிதப்படுத்தபட்டதாக ஐதீகம் உள்ளது. இந்த கோயிலின் மூலக் கோயில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாகவும், அது கடலில் முழ்கிவிட்டதாகவும் செவிவழிச் செய்தி நிலவுகிறது. இக்கோயிலின் கருவறையில் கிழக்கே பார்த்தபடி மகாவிஷ்ணுவும், மேற்கே பார்த்து சிவபெருமானும் காட்சியள்ளிப்பது சிறப்பு.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://www.keralatourism.org/destination/thirumullavaram-beach-kollam/251
- ↑ கேரளா ஒரு சுற்றுலா , நூல், பக்கம்- 154 வீ. கே, பாலன், மதுரா வெளியீடு, சென்னை, திசம்பர் 2005