மக்கள் விடுதலை முன்னணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜனதா விமுக்தி பெரமுன இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மக்கள் விடுதலை முன்னணி
People's Liberation Front
ජනතා විමුක්ති පෙරමුණ
தலைவர்அனுர குமார திசாநாயக்க
நிறுவனர்ரோகண விஜயவீர
செயலாளர்எம். டி. சில்வா
தொடக்கம்14 மே 1965 (1965-05-14)
பிரிவுஇலங்கை கம்யூனிஸ்ட் கட்சி
தலைமையகம்464/20 பன்னிப்பிட்டிய வீதி, பத்தரமுல்லை,
இலங்கை
செய்தி ஏடுசெஞ்சக்தி, நியமுவ, சீனுவ
கொள்கைபொதுவுடைமை,
மார்க்சியம்-லெலினியம்
தேசியக் கூட்டணிசனநாயகத் தேசியக் கூட்டணி
நிறங்கள்     சிவப்பு
நாடாளுமன்றம்
6 / 225
மாகாணசபைகள்
15 / 455
உள்ளூராட்சி அமைப்புகள்
74 / 4,327
தேர்தல் சின்னம்
மணி
இணையதளம்
www.jvpsrilanka.com
இலங்கை அரசியல்
மக்கள் விடுதலை முன்னணி, மே நாள் 1999.

மக்கள் விடுதலை முன்னணி (சிங்களம்: ජනතා විමුක්ති ෙපරමුණ ஆங்கிலம்: People's Liberation Front) இலங்கையின் அரசியற் கட்சிகளுள் ஒன்றாகும். சுருக்கமாக JVP என அழைக்கப்படுகிறது. இடதுசாரிக்கொள்கை மற்றும் தேசியவாதம் சார்ந்த கொள்கைகளைப் பின்பற்றி வருகிறது. இலங்கை அரசியலின் மூன்றாவது சக்தியாகக் கருதப்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக இரண்டு தடவைகள் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தது.

ஜேவிபியின் தோற்றம்[தொகு]

இலங்கைக் கம்யூனிஸ்ட் (சீன சார்பு) கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ரோகண வீஜயவீர (Rohana Wijeweera) 1965 மே 14 அன்று இக் கட்சியை நிறுவினார். சோசலிச சமத்துவத்திற்குப் பாடுபடப் போவதாகக் கட்சி அறிவித்தது. அது தொடர்பாக அரசியல் வகுப்புக்கள் பலவற்றை நடத்தினர். இவற்றால் கவரப்பட்ட படித்த கிராமப்புற இளைஞர்கள், மாணவர்கள், தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் பெருமளவாக ஜே.வி.பி.யில் இணைந்தனர். இரகசியமான முறையில் ஆயுதப் புரட்சிக்கு வேண்டிய ஆயத்தங்களையும் செய்து வந்தனர்.

1971ம் ஆண்டு கிளர்ச்சி[தொகு]

1971 மார்சசில் ஜே.வி.பி.யின் இரகசிய ஆயுதக்கிடங்கு பற்றி ஆளும் சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசிற்குத் தெரியவந்தது. இதனை அடுத்து ஜே.வி.பி.யின் தலைவர் ரோகண வீஜயவீர உடனடியாகக் கைது செய்யப்பட்டார். பின்னர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தலைவர் சிறைக்குள் இருக்கும்பொழுதே 1971 ஏப்ரல் 5ம் திகதி இலங்கை அரசிற்கு எதிராக ஜேவிபியினர் நாட்டின் பல பாகங்களில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். பல பொலிஸ் நிலையங்கள் தாக்கப்பட்டன. தெற்கின் பல பாகங்கள் ஜேவிபியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. கிளர்ச்சியினை முறியடிக்க இலங்கை அரசாங்கம் சர்வதேச உதவியினைக் கோரியது. உதவிக்கு விரைந்த இந்தியா, சீனா நாடுகளின் உதவியுடன் ஆயுதக்கிளர்ச்சி இரண்டு வார காலத்தினுள் அடக்கப்பட்டது. ஜேவிபி உறுப்பினர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். முடிவில் ஜேவிபியினை இலங்கை அரசு தடை செய்தது.

1977-1983 காலகட்டம்[தொகு]

1977 ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வென்ற ஜே. ஆர். ஜெயவர்த்தனா தலைமையிலான ஐதேக அரசு ரோகண வீஜயவீரவை விடுதலை செய்ததுடன் ஜேவிபி மீதான தடையினையும் நீக்கியது. ஜே.வி.பி. நாடாளுமன்ற ஜனநாயக முறைக்குத் திரும்புவதாக அறிவித்ததுடன், தேர்தல்களிலும் பங்குபற்றினர். 1982 ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபியின் வேட்பாளராக ரோகண வீஜயவீர போட்டியிட்டு 275,000 வாக்குகளைப் பெற்றார்.

1983 ஜூலைக்கலவரம்[தொகு]

கொழும்பில் 1983 ஜூலையில் இடம்பெற்ற இனக்கலவரத்தினை அடுத்து அக் கலவரத்திற்கு ஜேவிபியினரே காரணமெனக் கூறி இலங்கை அரசால் மீண்டும் இவ்வமைப்பு தடை செய்யப்பட்டது. இதன் பின்னர் ஜேவிபினர் தலைமறைவாக இயங்கத்தொடங்கினர்.

1987-1989 ம் ஆண்டு கிளர்ச்சி[தொகு]

1990ன் பின்னர்[தொகு]

ஜே.வி.பி. கட்சியானது புதிய தலைமைத்துவத்தின் கீழ் 1990 ன் பின்னர் மீள் கட்டியெழுப்பப்பட்டது. 1994 ம் ஆண்டிலிருந்து இடம் பெற்ற சகல தேர்தல்களிலும் பங்குபற்றி வருகின்றது.

2001ம் ஆண்டு இடம்பெற்ற பொதுதேர்தலில் 9% வாக்குகளைப் பெற்றனர். 2004ம் ஆண்டு பொதுத்தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு கூட்டணி ஆட்சி அமைத்தனர்.

ஜே.வி.பி. தற்போது தேசியவாதம் சார்ந்த கொள்கையினைப் பின்பற்றி வருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நோர்வே அரசு என்பவற்றிக்கெதிராக கடும் எதிர் நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கிறது.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்கள்_விடுதலை_முன்னணி&oldid=3057929" இலிருந்து மீள்விக்கப்பட்டது