சுஷ்மிதா பௌரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுஷ்மிதா பௌரி
பிஷ்ணுபூர் மக்களவைத் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்.
பதவியில்
2004-2014
முன்னையவர்சந்தியா பௌரி
பின்னவர்சௌமித்ரா கான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 சனவரி 1975 (1975-01-05) (அகவை 49)
காத்ரா, பாங்குரா மாவட்டம்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
துணைவர்குருச்சரண் பட்டாச்சார்யா
வாழிடம்பாங்குரா
தொழில்வழக்கறிஞர்

சுஷ்மிதா பௌரி (Susmita Bauri) (பிறப்பு ஜனவரி 1975 5) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் மேற்கு வங்காளத்தின் பிஷ்ணுபூர் மக்களவைத் தொகுதியிலிருந்து பதினான்காவது மக்களவைக்கும், பதினைந்தாவது மக்களவைக்கும் தேர்தெடுக்கப்பட்டார்.[1]

நிமாய் சரண் பௌரி - சந்தியா பௌரி தம்பதியின் மகளான இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் ஹஜ்ரா சட்டக் கல்லூரியிலிருந்து சட்டம் பயின்றார். ஒரு வழக்கறிஞராக இவர் ஏழை மக்களுக்கு, குறிப்பாக படிப்பறிவற்ற பெண்களுக்கு இலவச சட்ட உதவிகளை வழங்குகிறார்.[2] பௌரி சமூகத்தைச் சேர்ந்த இவரது தாயார் சந்தியா பௌரி, அதே தொகுதியில் மூன்று முறை மக்களவை உறுப்பினராக இருந்தார்.[3]

பதினான்காவது மக்களவையில் இவர் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் குழுவிலும், ஆற்றல் நிலைக்குழு உறுப்பினராகவும் இருந்தார். பதினைந்தாவது மக்களவையில் இவர் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் குழுவிலும், அவையில் உறுப்பினர்கள் இல்லாதிருப்பதற்கான குழு உறுப்பினராகவும் இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Susmita Bauri -Political Profile". Archived from the original on 21 October 2010.
  2. "Detailed Profile: Smt. Susmita Bauri". Government of India. பார்க்கப்பட்ட நாள் 2010-10-17.
  3. "CPM goes for kill with axe on losers". The Telegraph, 7 February 2004. பார்க்கப்பட்ட நாள் 2010-10-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுஷ்மிதா_பௌரி&oldid=3793874" இலிருந்து மீள்விக்கப்பட்டது