பன்னாட்டுத் தேயிலை நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துவக்கம்
 
(வேறுபாடு ஏதுமில்லை)

10:50, 13 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பன்னாட்டுத் தேயிலை நாள் (International Tea Day) 2005 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் டிசம்பர் 15 ஆம் நாள்[1] தேயிலை உற்பத்தி செய்யப்படும் வங்காளதேசம், இலங்கை, நேபாளம், வியட்நாம், இந்தோனேசியா, கென்யா, மலாவி, மலேசியா, உகாண்டா, இந்தியா, மற்றும் தன்சானியா உட்படப் பல நாடுகளில் நினைவு கூரப்பட்டு வருகிறது.[2] தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், தேயிலை உற்பத்தி செய்வோர், மற்றும் தேயிலையைப் பயன்படுத்துபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசாங்கக்களுக்கும், குடிமக்களுக்கும் கொண்டு செல்வதே இந்நாளின் முக்கிய நோக்கம் ஆகும். முதலாவது பன்னாட்டுத் தேயிலை நாள் 2005 டிசம்பர் 15 இல் புது தில்லி நடைபெற்றது. இரண்டாவது பன்னாட்டு நாள் 2006 இடிசம்பர் 15 இல் இலங்கையில் கண்டி நகரில் நடைபெற்றது. பன்னாட்டுத் தேயிலை நாள் கொண்டாட்டங்கள் ஊடாக நடைபெறும் பன்னாட்டு மாநாடுகள் தேயிலைத் தொழிற்சங்க இயக்கங்கள் முன்னெடுக்கின்றன.

மேற்கோள்கள்

  1. "International tea day 2013".
  2. "History of Tea : International Tea Day".

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்னாட்டுத்_தேயிலை_நாள்&oldid=1982692" இலிருந்து மீள்விக்கப்பட்டது