நாடு போற்ற வாழ்க: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி படிம இணைப்பு
வரிசை 39: வரிசை 39:


* தமிழ்ப்படத்தில் இடம்பெற்ற, ஈழத்து ரத்தினம் இயற்றிய நான்கு பாடல்களையும் [[வி. முத்தழகு]], [[கலாவதி]], சந்திரிகா, [[சுஜாதா அத்தநாயக்க]], [[சுண்டிக்குளி பாலச்சந்திரன்]] ஆகியோர் பாடியிருந்தார்கள்.
* தமிழ்ப்படத்தில் இடம்பெற்ற, ஈழத்து ரத்தினம் இயற்றிய நான்கு பாடல்களையும் [[வி. முத்தழகு]], [[கலாவதி]], சந்திரிகா, [[சுஜாதா அத்தநாயக்க]], [[சுண்டிக்குளி பாலச்சந்திரன்]] ஆகியோர் பாடியிருந்தார்கள்.


==வெளி இணைப்புக்கள்==
[http://balafilms.homestead.com/nadupova.html நாடு போற்ற வாழ்க புகைப்படங்கள்]


[[பகுப்பு: ஈழத்து தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு: ஈழத்து தமிழ்த் திரைப்படங்கள்]]

11:36, 7 மார்ச்சு 2007 இல் நிலவும் திருத்தம்

நாடு போற்ற வாழ்க
படிமம்:Npv3.jpg
இயக்கம்யசபாலித்த நாணயக்கார
கதைஎஸ். என். தனரட்ணம்
இசைசரத் தசநாயக்க
நடிப்புவி. பி, கணேசன்
கே. எஸ். பாலச்சந்திரன்
கீதா குமாரதுங்க
ஸ்வர்ணா மல்லவராச்சி
எஸ். ராம்தாஸ்
எம். எம். ஏ. லத்தீப்
எம். ஏகாம்பரம்
உபாலி செல்வசேகரன்
டொன் பொஸ்கோ
மணிமேகலை
புஸ்பா
ரஞ்சனி
ஒளிப்பதிவுஜோன். யோகராஜா
விநியோகம்கணேஷ் பிலிம்ஸ்
வெளியீடு1981
நாடுஇலங்கை
மொழிதமிழ்

நாடு போற்ற வாழ்க இலங்கையில் 1981 இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். இலங்கையின் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான வி. பி. கணேசன் தயாரித்த மூன்றாவது திரைப்படம் இது. மலையகத்தில் தியத்தலாவை, பண்டாரவளை, ஹப்புத்தளை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது. கணேஷ் பிலிம்ஸ் இந்த திரைப்படத்தை 1981ல் ஆறு முக்கிய நகரங்களில் திரையிட்டார்கள்.

வி. பி, கணேசன், கே. எஸ். பாலச்சந்திரன், கீதா குமாரதுங்க, ஸ்வர்ணா மல்லவராச்சி, எஸ். ராம்தாஸ் உட்படப் பலர் நடித்திருந்தனர். இதன் பாடல்களை ஈழத்து இரத்தினம் இயற்றியிருந்தார்.

கதைச் சுருக்கம்

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

கண்ணன் (வி. பி. கணேசன்) என்ற ஏழை இளைஞனும், அவனது நண்பன் மரிக்காரும் (ராம்தாஸ்) ஒரு பணக்காரரின் (லத்தீப்) பறிபோன பணப்பெட்டியை மீட்டுக்கொடுத்து, அவரது எஸ்டேட்டிலேயே வேலை பெற்றுக்கொள்கிறார்கள். பணக்காரரின் மகளான சரோஜா (சுவர்ணா) எஸ்டேட் சுப்பிறிண்டெண்ட் விஸ்வநாத் (பாலச்சந்திரன்) உடன் நெருக்கமாக பழகிக்கொண்டே, கண்ணனுடனும் அன்பாக நடந்து கொள்கிறாள். கண்ணன் இன்னுமொரு செல்வந்தரின் (ஏகாம்பரம்) மகளான வனிதாவை (கீதா) தான் உண்மையில் காதலிக்கிறான். இந்த நேரத்தில் சரோஜா கர்ப்பமாகிறாள். பழி கண்ணன் மேல் விழுகிறது.

அவமானத்தினால் சரோஜா தலைமறைவாகிவிட, அவள் இறந்துவிட்டாள் என்று நினைத்து, விஸ்வநாத் கண்ணன் மீதுள்ள கோபத்தினால், அவனது காதலி வனிதாவை மலை உச்சிக்கு அழைத்துபோய் கொலை செய்யப்போகிறான். கண்ணனுக்கும், விஸ்வநாத்துக்கும் மலை உச்சியில் சண்டை நடக்கிறது. இறந்துபோனதாக நினைத்த சரோஜா திரும்பி வருகிறாள். உண்மை தெரிய வருகிறது. இரண்டு ஜோடியும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

குறிப்பு


வெளி இணைப்புக்கள்

நாடு போற்ற வாழ்க புகைப்படங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடு_போற்ற_வாழ்க&oldid=110609" இலிருந்து மீள்விக்கப்பட்டது