சாருகேசி (எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாருகேசி என்ற புனைபெயரைக் கொண்ட எஸ். விஸ்வநாதன் (1938 - சனவரி 30, 2019) தமிழக எழுத்தாளரும், இசை விமர்சகரும் ஆவார். பிரபலமான வார, மாத இதழ்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் சங்கீத, நாட்டிய, நாடக விமர்சனங்கள் எழுதி வந்தார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சாருகேசியின் இயற்பெயர் சுப்பிரமணியன் விஸ்வநாதன். பாலக்காட்டில் பிறந்தார். எழுத்தாளர் எழுத்தாளர் தேவனின் உறவினர்.[1] இவரது முதல் கட்டுரை 1955 ‘கண்ணன்’ இதழில் வெளியானது.[1] முதல் சிறுகதை 1960 இல் கல்கி இதழில் வெளியானது.[1] அகமதாபாதில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார். பின்னர் சென்னை திரும்பி இந்து, வீக்எண்ட் எக்ஸ்பிரஸ், எகனாமிக் டைம்சு போன்ற நாளிதழ்களில் ஆங்கிலக் கட்டுரைகளை எழுதினார்.[1] சுதா மூர்த்தியின் மூன்று ஆங்கில நூல்களைத் தமிழாக்கம் செய்துள்ளார்.[1]

பின்னாட்களில் தனது கர்நாடக இசை அறிவைப் பெருக்கிக் கொண்டார். 1980-களில் சமூக ஆர்வலர்கள், இலக்கிய ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், கலைத்துறையினர் என பலர்காணல்களை கல்கியில் எழுதினார்.[2] உலக மாமியார்களே ஒன்று சேருங்கள் என்ற இவரது சிறுகதை கல்கியில் முதல்பரிசை வென்றது.[2] 28 இளம் கலைஞர்களின் நேர்காணல்கள் 'இயல் இசை நாடகம்' என்ற பெயரிலேயே நூலாக வெளிவந்தது.[1]

சமூகப் பணி[தொகு]

புத்தக நண்பர்கள் சங்கத்தில் இவரது பங்களிப்பு முக்கியமானது. தேவன் அறக்கட்டளையிலும் முக்கியப் பொறுப்புகளை ஏற்று செயல்பட்டு வந்தார்.[1]

மறைவு[தொகு]

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில்[1] சாருகேசி சென்னையில் அபிராமபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் 2019 சனவரி 30 இல் தனது 80-வது அகவையில் காலமானார்.[2] இவர் திருமணம் செய்யாதவர். இவருக்கு 4 சகோதரிகள், 2 சகோதரர்கள் உள்ளனர். மஞ்சரி இதழின் ஆசிரியராகப் பணியாற்றிய லெமன் என்கிற லெட்சுமணன் இவரது மூத்த சகோதரர்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாருகேசி_(எழுத்தாளர்)&oldid=2776573" இலிருந்து மீள்விக்கப்பட்டது