சல்மா (கவிஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவிஞர் சல்மா
SalmaDSC 0099.JPG
தமிழ்நாடு சமூகநல வாரியத் தலைவர்
தொகுதி மருங்காபுரி
தனிநபர் தகவல்
பிறப்பு திசம்பர் 19, 1967 (1967-12-19) (அகவை 55)
சென்னை, தமிழ்நாடு
அரசியல் கட்சி தி.மு.க.
வாழ்க்கை துணைவர்(கள்) அப்துல் மாலிக் ( 1988 - தற்போது வரை )
பிள்ளைகள் சலீம் ஜாஃபர், முஹம்மது நதீம்
இருப்பிடம் சென்னை

சல்மா (Salma) ஒரு தமிழ்ப் பெண் கவிஞர் மற்றும் அரசியல்வாதி. இவர் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்தார். இவர் தொண்ணூறுகளின் இறுதியில் எழுதத் தொடங்கினார். சலீம்ஜாஃபர், முஹம்மதுநதீம் என இரண்டு புதல்வர்களைக் கொண்ட சல்மா பொன்னாம்பட்டிதுவரங்குறிச்சி பேரூராட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். 2006ல் மருங்காபுரி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். இவர் பல கவிதை நூல்களை எழுதியுள்ளார். பின்னர் தமிழ்நாடு சமூகநல வாரிய தலைவியாக, கவிஞர் சல்மா நியமனம் செய்யப்பட்டார்.[1] தி.மு.க.வில் மகளிர்அணி பிரச்சாரக்குழு செயலாளராக பணியாற்றி வருகிறார்.[2]

கவிதைத் தொகுப்புகள்[தொகு]

  • ஒரு மாலையும் இன்னொரு மாலையும்
  • பச்சை தேவதை

புதினங்கள்[தொகு]

  • இரண்டாம் ஜாமங்களின் கதை
  • மனாமியங்கள்

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.dinakaran.com/chennaidetail.aspx?id=2889&id1=9[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2009-06-19 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2010-06-10 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புக்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சல்மா_(கவிஞர்)&oldid=3583940" இருந்து மீள்விக்கப்பட்டது