சர் சரி சர் பக்சி

ஆள்கூறுகள்: 20°0′50.18″N 75°11′9.83″E / 20.0139389°N 75.1860639°E / 20.0139389; 75.1860639
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1890 ஆம் ஆண்டில் சர் சரி சர் பக்சி தர்கா குல்தாபாத்

சர் சரி சர் பக்சி (Zar Zari Zar Baksh) அல்லது சா முந்தாசப் உத் தின், இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள அனைத்து சூபி வரிசைகளிலும் ஆதிக்கம் செலுத்திய சிசுடி வரிசையின் ஆரம்பகால சூபிகளில் ஒருவர் ஆவார். கிசிரி எனப்படும் இசுலாமிய நாட்காட்டி 8 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (கி.பி 14 ஆம் நூற்றாண்டு) தில்லியின் கசரத் நிசாமுதீன் அவுலியாவால் தக்காணத்திற்கு அனுப்பப்பட்டார். 700 சீடர்களுடன், சர் சரி சர் பக்சி அவுரங்காபாத் வந்தார். மேலும் குல்தாபாத்தில் உள்ள ஒரு கிணற்றுக்கு அருகில் இந்து இளவரசியை இவர் மதம் மாற்றியதாக கூறப்படுகிறது. அந்த இடம் இப்போது " சோகன் பாவோலி " அல்லது "மகிழ்ச்சி தரும் இடம்" என்று அழைக்கப்படுகிறது. மேலும் குல்தாபாத்தில் உள்ள புனிதர்களின் கல்லறைக்கு அருகில் இளவரசி அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மாலிக் அம்பரின் கல்லறைக்கும் நகரின் வடக்கு வாயிலுக்கும் இடையே சர் சரி சர் பக்சின் கல்லறை உள்ளது. இது பல ஆபரணங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களைக் கொண்டுள்ளது. இதில் மிகவும் குறிப்பிடத்தக்கது நான்கு அடி உயரமுள்ள எஃகு பீடத்தின் மீது பொருத்தப்பட்ட வட்ட வடிவ எஃகு கண்ணாடி ஆகும். இக்கண்ணாடியானது மன்னர் தனா சாவால் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. குல்தாபாத்தில் உள்ள தர்கா துறவியின் ஊர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்களை ஈர்க்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  • ஔரங்காபாத் கெசட்டர் - நிசாம் அரசாங்கம் 1884. (அத்தியாயம் 6 பக்கம் 395)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்_சரி_சர்_பக்சி&oldid=3863139" இலிருந்து மீள்விக்கப்பட்டது