கானிங் பிரபு
கானிங் பிரபு | |
---|---|
![]() | |
1840ல் கானிங் பிரபு | |
இந்தியத் தலைமை ஆளுநர் | |
பதவியில் 28 பிப்ரவரி 1856 – 21 மார்ச் 1862 | |
அரசர் | ராணி விக்டோரியா |
பிரதமர் | ஹென்றி ஜான் டெம்பிள் டெர்பி பிரபு |
முன்னவர் | டல்ஹவுசி பிரபு |
பின்வந்தவர் | எல்ஜின் பிரபு |
ஐக்கிய இராச்சியத்தின் அஞ்சல்துறை தலைவர் | |
பதவியில் 5 ஜனவரி 1853 – 30 ஜனவரி1855 | |
அரசர் | ராணி விக்டோரியா |
பிரதமர் | அபர்தீன் பிரபு |
முன்னவர் | ஹார்டுவிக் பிரபு |
பின்வந்தவர் | ஜார்ஜ் காம்பெல் |
வனத்துறை ஆணையாளர் | |
பதவியில் 2 மார்ச்1846 – 30 சூன் 1846 | |
அரசர் | ராணி விக்டோரியா |
பிரதமர் | சர் ராபர்ட் பீல் |
முன்னவர் | லிங்கன் பிரபு |
பின்வந்தவர் | விஸ்கவுண்ட் மோர்பெத் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | திசம்பர் 14, 1812 பிராம்டன், லண்டன் |
இறப்பு | 17 சூன் 1862 குரோஸ்வெனோர் சதுக்கம், லண்டன் | (அகவை 49)
தேசியம் | பிரித்தானியர் |
அரசியல் கட்சி | கன்சர்வேடிவ் கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | சார்லெட் ஸ்டூவர்ட் (1817–1861) |
படித்த கல்வி நிறுவனங்கள் | கிறிஸ்து சர்ச் கல்லூரி, ஆக்ஸ்போர்டு |
சார்லஸ் ஜான் கானிங் பிரபு (Charles John Canning, 1st Earl Canning) (14 டிசம்பர் 1812 – 17 சூன் 1862), பிரித்தானிய அரசியல்வாதியும், 1857 சிப்பாய்க் கிளர்ச்சியின் போது, பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநராக 28 பிப்ரவரி 1856 முதல் 21 மார்ச் 1862 முடிய பதவி வகித்தவர். [1][2]
ஐக்கிய இராச்சியத்தில் அரசியல் பணி (1836-1855)[தொகு]
1836ல் கானிங் பிரபு கன்சர்வேடிவ் கட்சியின் சார்பாக, வார்விக் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1841ல் பிரித்தானிய அமைச்சரவையில் வெளியுறவுத்துறையில் துணைச் செயலராக பதவியில் இருந்தார்.
1846ல் பிரித்தானிய இராச்சியத்தின் வனத்துறை முதல் ஆணையாளராக பதவி வகித்தார்.
1853 -1855 முடிய ஐக்கிய இராச்சியத்தின் அஞ்சல் துறையில் தலைமை அஞ்சல் அலுவராக பதவி வகித்தார். டல்ஹவுசிக்குப் பின்னர் பிரித்தானிய இந்தியாவின் இந்தியத் தலைமை ஆளுநராக 28 பிப்ரவரி 1856 முதல் 21 மார்ச் 1862 முடிய பதவி வகித்தவர்.
இந்தியத் தலைமை ஆளுநர் பணியில் (1856-1862)[தொகு]
- 1856ல் விதவை மறுமணச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
- வட இந்தியா முழுவதும் நடந்த சிப்பாய் கிளர்ச்சியை ஒடுக்கினார்.
- 1858ல் பிரித்தானிய இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து தில்லிக்கு மாற்றப்பட்டது.
- சென்னைப் பல்கலைக்கழகம், பம்பாய் பல்கலைக்கழகம் மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகம் ஆகியவைகள் 1858ல் நிறுவப்பட்டது.
- பிரித்தானிய இந்தியா அரசின் நிர்வாகத்தை மேம்படுத்த இந்திய அரசுச் சட்டம், 1858 ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
மேலும் படிக்க[தொகு]
- Michael Maclagan (1963). "Clemency" Canning: Charles John, 1st Earl Canning, Governor-General and Viceroy of India, 1856–1862. Macmillan. https://books.google.com/books?id=WUg5AQAAIAAJ.
வெளி இணைப்புகள்[தொகு]
- ஹன்சார்ட் 1803–2005: contributions in Parliament by Charles Canning