கணபதி ஐயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணபதி ஐயர் (1709 - 1794) ஈழத்தில் மரபுவழி நாடகங்களின் முன்னோடி என அறியப்படுபவர். அத்துடன் இவர் ஒரு சிற்றிலக்கியப் புலவரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இப்புலவர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வசித்தவர். தமது சுற்றத்தவர்களுள் ஒருவரான சண்முக ஐயர் என்பவர் சில கீர்த்தனைகளுடன் தொடங்கி நிறைவேற்றாதுவிட்ட சுந்தரி நாடகத்தை வாளபிமன் நாடகம் என்று மாற்றி, எல்லோரும் வியக்கும் வண்ணம் பாடி முடித்தவர்.

இயற்றிய நூற்கள்[தொகு]

நாடகங்கள்[தொகு]

  • வாளபிமன் நாடகம்
  • வயித்திலிங்கக்குறவஞ்சி
  • மலையநந்தினி நாடகம்
  • அலங்காரரூப நாடகம்
  • அதிரூபவதி நாடகம்

சிற்றிலக்கியங்கள்[தொகு]

  • வட்டுநகர்ப்பிட்டி வயற்பத்திரகாளி பேரில் பதிகம், ஊஞ்சற் பிரபந்தம்
  • பருத்தித்துறை கணேசர் பேரில் வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி, மருள் என்னும் நூறு கவிதைகள்

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணபதி_ஐயர்&oldid=961837" இலிருந்து மீள்விக்கப்பட்டது