கணபதி ஐயர்
கணபதி ஐயர் (1709 - 1794) ஈழத்தில் மரபுவழி நாடகங்களின் முன்னோடி என அறியப்படுபவர். அத்துடன் இவர் ஒரு சிற்றிலக்கியப் புலவரும் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
இப்புலவர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வசித்தவர். தமது சுற்றத்தவர்களுள் ஒருவரான சண்முக ஐயர் என்பவர் சில கீர்த்தனைகளுடன் தொடங்கி நிறைவேற்றாதுவிட்ட சுந்தரி நாடகத்தை வாளபிமன் நாடகம் என்று மாற்றி, எல்லோரும் வியக்கும் வண்ணம் பாடி முடித்தவர்.
இயற்றிய நூற்கள்[தொகு]
நாடகங்கள்[தொகு]
- வாளபிமன் நாடகம்
- வயித்திலிங்கக்குறவஞ்சி
- மலையநந்தினி நாடகம்
- அலங்காரரூப நாடகம்
- அதிரூபவதி நாடகம்
சிற்றிலக்கியங்கள்[தொகு]
- வட்டுநகர்ப்பிட்டி வயற்பத்திரகாளி பேரில் பதிகம், ஊஞ்சற் பிரபந்தம்
- பருத்தித்துறை கணேசர் பேரில் வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி, மருள் என்னும் நூறு கவிதைகள்
உசாத்துணை[தொகு]
- John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, Ceylon, 1923, (2ம் பதிப்பு: 2003)