ஓய்வு நாள் (யூதம்)
ஓய்வு நாள் (சபாத்; Shabbat) என்பது யூத சமயத்தில் வாரத்தின் ஏழாவது நாள் ஆகும். ஆறு நாட்களில் உலகைப் படைத்த இறைவன் ஏழாம் நாள் ஓய்வு எடுத்ததை இது அடிப்படையாய்க் கொண்டுள்ளது. ஓய்வு நாள் வெள்ளிக்கிழமை சூரிய மறைவிலிருந்து சனிக்கிழமை இரவு வரையிலான காலம் ஆகும்.[1]
பத்துக் கட்டளைகளின் அடிப்படையில் ஓய்வு நாளின் போது இறைவனை ஆராதிப்பதைத் தவிர எந்த வேலையும் செய்யக் கூடாது; பெரும்பாலான இயந்திரங்களை இயக்கக் கூடாது.
மற்ற மதங்களில்
[தொகு]கிறிஸ்தவம்
[தொகு]பெரும்பாலான கிறிஸ்தவர்கள் சனிக்கிழமை ஓய்வு நாளைக் கடைபிடிப்பதில்லை. மாறாக ஞாயிற்றுக்கிழமை வழிபாடு நடத்துகிறார்கள். இது பெரும்பாலும் "ஆண்டவர் தினம்" என்று அழைக்கப்படுகிறது. ஏழாம் நாள் வருகை சபை, இறைவனின் சபை), ஏழாம் நாள் திருமுழுக்கு சபை போன்ற பல கிறிஸ்தவ பிரிவுகள் ஏழாவது நாள் ஓய்வு நாளை கடைபிடிக்கின்றன. இந்த அனுசரிப்பு வெள்ளிக்கிழமை சூரிய அஸ்தமனம் முதல் சனிக்கிழமை சூரிய அஸ்தமனம் வரை கொண்டாடப்படுகிறது.
சமாரியர்
[தொகு]சமாரியர்களும் ஓய்வு நாளை கடைப்பிடிக்கின்றனர்.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கத்தோலிக்க கலைக்களஞ்சியம்". Retrieved May 29, 2012.
- ↑ "Sabbat Observance". AB Institute for Samaritan Studies, supported by the Israeli Ministry of Culture. Retrieved 20 December 2022.
- ↑ "Dying Out: The Last Of The Samaritan Tribe – Full Documentary". Little Dot Studios. Retrieved 20 December 2022.