இப்ராகிம் கான் பத்-இ-சாங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இப்ராகிம் கான்
பத்-இ-சாங்
வங்காளத்தின் சுபாதார்
பதவியில்
1617–1624
ஆட்சியாளர்ஜஹாங்கீர்
முன்னையவர்காசிம் கான் சிசுடி
பின்னவர்மக்மத் கான்
தனிப்பட்ட விவரங்கள்
இறப்பு20 ஏப்ரல் 1624
பாகல்பூர், வங்காள சுபா
பெற்றோர்
  • மிர்சா கியாசு பேக் (father)
உறவினர்கள்அபுல்-உசைன் ஆசப் கான் (சகோதரர்), நூர் சகான் (சகோதரர்), குவாஜா முகமது செரீப் (தாத்தா)

மிர்சா இப்ராகிம் பேக் என்கிற இப்ராகிம் கான் பத்-இ-சாங் (Ibrahim Khan Fath-i-Jang) (இ; 1624) பேரரசர் ஜஹாங்கீர் ஆட்சியின் போது வங்காளத்தின் சுபாதாரராக இருந்தார். இவர் பேரரசி நூர் சகானின் சகோதரரும் ஆவார்.

சுயசரிதை[தொகு]

சியா இசுலாம் குடும்பத்தில் பிறந்த கான், மிர்சா கியாசு பேக்கின் மகன். இவரது மாமா, முகம்மது-தாகிர், வாசிலி என்ற புனைப்பெயரில் கவிதை இயற்றிய ஒரு கவிஞராவார். [1] இப்ராகிம் கானின் தந்தை தெகுரானைப் பூர்வீகமாகக் கொண்டவர் . மேலும், பாரசீக அரசியல்வாதியான குவாஜே முகமது-செரீப்பின் இளைய மகனும் ஆவார். [2] இவரது தந்தை கியாசு பேக், பிற்காலத்தில் முகலாயப் பேரரசுக்கு குடிபெயர்ந்தார்.

அக்பரின் ஆட்சியில் இப்ராகிம் கான் ஒரு வீரராகப் பணியாற்றினார். இராணுவப் பயணங்களில் காசிம் கான் சிஷ்டியின் தோல்வியின் விளைவாக, ஜஹாங்கீரின் ஆட்சியின் போது, 1617 இல் முகலாய வங்காளத்தின் அடுத்த ஆளுநராக இப்ராகிம் நியமிக்கப்பட்டார். 1620 ஆம் ஆண்டில், அரகானின் மாக்கள் வங்காளத் தலைநகரான ஜஹாங்கிர்நகரை ( டாக்கா ) தாக்கினர். பதிலுக்கு, கான் அவர்களை தோற்கடித்து 400 மாக் போர் படகுகளை கைப்பற்றினார். டாக்காவின் இந்தப் பகுதி தொடர்ந்து மாக்பஜார் என்று இன்றும் அழைக்கப்படுகிறது. இவரது பதவிக்காலத்தில், சிறையிலிருந்த பரோ-புயான் தலைவர் மூசா கான் மற்றும் அவரது கூட்டாளிகளையும் தனது செல்வாக்கால் விடுவித்தார். டாக்காவின் கடற்படைத் தளபதியாக திலால் கானை இப்ராகிம் கான் நியமித்ததாகக் கூறப்படுகிறது.

இறப்பு[தொகு]

இவர் 20 ஏப்ரல் 1624 அன்று கிளர்ச்சி இளவரசர் ஷாஜகானின் தாக்குதலில் இறந்தார். பின்னர், பாகல்பூரில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். [3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Findly, Ellison Banks (1993). Nur Jahan, empress of Mughal India. 
  2. Shokoohy, Mehrdad "{{{title}}}"..  
  3. Banglapedia: National Encyclopedia of Bangladesh.