ஆர். சண்முகசுந்தரம் (வழக்கறிஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர். சண்முகசுந்தரம்
தமிழக அரசுத் தலைமை வழக்குரைஞர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2021
முன்னையவர்விஜய் நாராயண்
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
2002-2008
தொகுதிதமிழ்நாடு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 அக்டோபர் 1953 (1953-10-29) (அகவை 70)
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
மூலம்: [1]

இராஜகோபால் சண்முகசுந்தரம் என்பவர் தமிழக அரசுத் தலைமை வழக்கறிஞராக உள்ளவராவார்.[1] திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 1953 இல் பிறந்தவரான சண்முக சுந்தரம் 1977இல் வழக்கறிஞராக பதிவு செய்தார். 1989 -1991 இல் திமுக ஆட்சியில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராகவும், 1996-2001 திமுக ஆட்சியில் மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞராக பணியாற்றி அரசு வழக்கறிஞராக அனுபவம் பெற்றவர்.[2][3] இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டு 2002-2008 காலகட்டத்தில் இருந்தார். 1995 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி ஜெயலலிதா மீது ஊழல் வழக்குப் பதிவு செய்யப் போகும் போது இவர் தாக்கப்பட்டார். "வெல்டிங் "குமார் மற்றும் 6 பேர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதற்குதண்டனை பெற்றனர்.[4][5][6]

குறிப்புகள்[தொகு]

 

  1. "R Shanmugasundaram is new advocate-general of Tamil Nadu". Subra Mani. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 8 May 2021. பார்க்கப்பட்ட நாள் 12 May 2021.
  2. "R. Shunmugasundaram". Rajya Sabha. Archived from the original on 27 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 29 April 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952-2019" (PDF). மாநிலங்களவை. பார்க்கப்பட்ட நாள் 12 May 2021.
  4. "Lifer for attack on lawyer". Frontline. 29 November 1997. பார்க்கப்பட்ட நாள் 12 May 2021.
  5. "New AG was once attacked for filing case against Jaya". Daily Thanthi. 11 May 2021. Archived from the original on 12 மே 2021. பார்க்கப்பட்ட நாள் 12 May 2021.
  6. "What it was like to work with Karunanidhi". தி எகனாமிக் டைம்ஸ். 12 August 2018. பார்க்கப்பட்ட நாள் 12 May 2021.