அழகர் மலை
Jump to navigation
Jump to search
அழகர் மலை மதுரையின் வடக்கே 19 கீ.மீ. தொலைவில் உள்ள ஒரு மலையாகும். இதுவொரு அடர்ந்த காடுகள் சூழ்ந்த உயிரியற் பல்வகைமை கொண்டது. பல அரியவகை மூலிகை மரங்களும், நீர் ஊற்றுக்களும் உள்ளன.[1] சங்ககாலப் பகுதியின் பிற்பகுதியில் தோன்றிய நூல் என்று கருதப்படும் பரிபாடல் 15ஆம் பாடலில் இந்த மலையின் பெருமை விரிவாகப் பேசப்படுகிறது. இதனைப் பாடியவர் இளம்பெரு வழுதி.
மலையின் பெயர்கள்[தொகு]
அழகர்மலையைக் குறிக்கும் பெயர்களில் குறிப்பிடத்தக்கவை சில.
- திருமாலிருஞ்சோலை
- இருங்குன்று
- பெரும்பெயர் இருவரை
- கேழ் இருங்குன்று (அழகர் மலை)
இக் குன்றில் குடிகொண்டுள்ள திருமலால் கள் [2] அணிந்த பசுந்துளசியை மாலையாக அணிந்துகொண்டுள்ளதால கள்ளழகர் எனப்பட்டார். [3] [4]
இம்மலையில் உள்ள முக்கிய தலங்கள்[தொகு]
உசாத்துணை[தொகு]
- ↑ "Ecoheritage". http://www.ecoheritage.cpreec.org/Viewcontall.php?$mFJyBfK$MzOYi8oJC?.
- ↑ தேன்
- ↑ அன்பு அது மேஎய் இருங்குன்றத்தான்.
கள் அணி பசுந் துளவினவை, கருங் குன்றனையவை; (பரிபாடல் 15 அடி 53-54) - ↑ கள்ளணி பசுந்துளவு என்பது துளசிப் பூவோடு கூடிய துளசியிலை மாலை
வெளி இணைப்புகள்[தொகு]
- http://rayilpayanam.blogspot.in/2017/05/blog-post_22.html (அழகரின் திருவிளையாடல்)
- அழகர் மலையின் பழமைச் சிறப்பு