அம்பிகாபதி (1937 திரைப்படம்)
அம்பிகாபதி | |
---|---|
![]() | |
இயக்கம் | எல்லிஸ் ஆர். டங்கன் |
தயாரிப்பு | எம். எஸ். தொட்டண்ணா செட்டியார் சேலம் சங்கர் பிலிம்ஸ் |
கதை | திரைக்கதை : டி. ஆர். எஸ். மணி உரையாடல் : இளங்கோவன் |
இசை | பாபநாசம் சிவன் |
நடிப்பு | எம். கே. தியாகராஜ பாகவதர் பி. வி. ரெங்காச்சாரி செருக்களத்தூர் சாமா என். எஸ். கிருஷ்ணன் டி. எஸ். பாலையா எம். ஆர். சந்தானலட்சுமி கொன்னப்ப பாகவதர் டி. ஏ. மதுரம் எஸ். எஸ். ராஜமணி பி. ஆர். மங்களம் பி. ஜி. வெங்கடேசன் |
படத்தொகுப்பு | எல்லிஸ் ஆர். டங்கன் |
வெளியீடு | திசம்பர் 11, 1937 |
நீளம் | 19000 அடி |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
அம்பிகாபதி 1937 ஆம் ஆண்டு வெளிவந்த 52 வாரங்கள் ஓடிய வரலாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும். சேலம் சங்கர் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் எம். எஸ். தொட்டண்ணா செட்டியார் தயாரித்து, எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், பி. வி. ரெங்காச்சாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1][2] இப்படத்துக்கு இளங்கோவன் எழுதிய உரையாடல் அனைவரையும் கவரும்வகையில் அழகுத் தமிழில் இருந்தது. இது தமிழ் சினிமா உரைநடையில் பெருமளவு மாற்றத்தைக் கொண்டுவந்தது. இப்படம் வருவதற்கு முன்பு மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டுவந்த தமிழ் சினிமாவின் உரையாடல் நல்ல தமிழுக்கு மாறத் துவங்கியது.
ராஜா மகளை புலவரின் மகன் காதலிப்பதே கதை. இதை ரோமியோ ஜூலியட் வடிவில் படமாக்கினார் எல்லிஸ் டங்கன். இப்படம் கவித்துவமாக எடுக்கப்பட்டதால் பலத்த வரவேற்பு பெற்றது. தியாகராஜ பாகவதர், கொன்னப்ப பாகவதர், எம்.ஆர். சந்தானலட்சுமி நடித்தனர். இதில் சிறுகளத்தூர் சாமா, ரங்காச்சாரி தவிர கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் முக்கியமானவர். பாகவதரின் பாடல்களுக்காகவே இப்படம் ஒரு ஆண்டு காலம் ஓடியது. அது மட்டுமல்ல, ஆங்கிலப் படங்களுக்கு இணையான முத்தக் காட்சியும் இப்படத்தில் இடம்பெற்றிருந்தது. தமிழ் சினிமாவில் இடம்பெற்ற முதல் முத்தக் காட்சி இதுதான். இயக்கியது டங்கன் என்பதால்தான் தைரியமாக அந்த காட்சியை படமாக்க முடிந்தது.
உப தகவல்[தொகு]
- எம். கே. தியாகராஜ பாகவதர் பாடல் சிறப்பு அம்சம் கொண்டது.[1]
- சேக்சுபியரின் ரோமியோ - ஜுலியட் போன்றதொரு கதையமைப்பு.[1]
- இப்படத்தை இயக்கிய எல்லிஸ் ஆர். டங்கன் ஒரு அயல்நாட்டுக்காரர் ஆவார்.[1]