அடுக்குப் பாடல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அடுக்குப் பாடல்கள் ஓசை-அடுக்கிலும், எண்ணிக்கை அடுக்கிலும் காணப்படுகின்றன. ஒரு நிகழ்வின்மீது ஒத்த ஓசைப்பாக்கள் பல பாடல்களை அடுக்கிப் பாடப்பட்ட பாடல்கள் இசையடுக்குக் பாடல்கள்.

இசையடுக்கு[தொகு]

மூன்றடுக்குத் தாழிசை

மூன்றடுக்கு வரியிசை

  • சிலப்பதிகார வரிப்பாடல்கள் மூன்றடுக்காக வரும் இசையடுக்குப் பாடல்கள் [2]

எண்ணடுக்கு[தொகு]

ஒரு பொபொருளின் மீது அடுக்கி வரும் பாடல்கள் ஒத்த ஓசை-அடுக்கு இல்லாமல் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அடுக்கி வருவதுண்டு. இவை எண்ணடுக்குப் பாடல்கள். இவற்றைப் பத்து என்னும் சொல்லால் குறிப்பிடுகின்றனர். [3]

பத்தடுக்கு

பத்துக்கு மேலும் அடுக்கு[தொகு]

14 பாடல்கள் கொண்ட அடுக்கு

30 பாடல்கள் கொண்ட அடுக்கு

  • சேது புராணம் பத்துக்கு மேற்பட்ட பல எண்ணிக்கைகளில் ஆங்காங்கே அடுக்கிப் பாடப்பட்ட துதிப்பாடல்களைக் கொண்ட நூல்

பல்வேறு எண்ணிக்கையில் அளவொத்த அடுக்கு[தொகு]

பஞ்சகம், அட்டகம், பதிகம், இரட்டைமணிமாலை, மும்மணிமாலை, நவமணிமாலை முதலான சிற்றிலக்கிய வகைகள் எண்ணிக்கையில் அளவொத்த அடுக்கு நூல்கள்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. தோள் நலம் உண்டு துறக்கப்பட்டோர்,
    வேள் நீர் உண்ட குடை ஓரன்னர்;
    நல்குநர் புரிந்து நலன் உணப்பட்டோர்,
    அல்குநர் போகிய ஊர் ஓரன்னர்;
    கூடினர் புரிந்து குணன் உணப்பட்டோர்.
    சூடினர் இட்ட பூ ஓரன்னர்;
  2. கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன் 1
    இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
    கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ;
    பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன் 2
    ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
    ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ;
    கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன் 3
    எல்லைநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
    முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ;
  3. பதிற்றுப்பத்து இரண்டாம் பத்து, ஐங்குறுநூறு குறிஞ்சி அன்னை பத்து,
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடுக்குப்_பாடல்கள்&oldid=1392206" இலிருந்து மீள்விக்கப்பட்டது