உதயணன், மகத நாடு
உதயணன், மகத நாடு | |
---|---|
மகத நாட்டின் ஆட்சியாளர் | |
ஆட்சிக்காலம் | அண். 460 – அண். 440 கிமு |
முன்னையவர் | அஜாதசத்ரு |
பின்னையவர் | அனுருத்தன் |
பிறப்பு | கிமு ஐந்தாம் நூற்றாண்டு |
இறப்பு | கிமு 440 |
அரச குலம் | ஹரியங்கா வம்சம் |
தந்தை | அஜாதசத்ரு |
உதயணன் (King Udayin) பரத கண்டத்தின் மகத நாட்டை ஆண்ட ஹரியங்கா வம்சத்தின் மூன்றாவது பேரரசர் ஆவார். இவர் மகத நாட்டை கிமு 460 முதல் கிமு 440 வரை ஆண்டார். உதயணன், அஜாதசத்ருவின் மகனும், பிம்பிசாரனின் பேரனும் ஆவார்.[1]
பாடலிபுத்திரம் நகரத்தை நிறுவதல்[தொகு]
உதயணன் சோன் ஆறு மற்றும் கங்கை ஆறு கூடுமிடத்தில் பாடலிபுத்திரம் எனும் புதிய நகரத்தை நிறுவி, தனது தலைநகரத்தை ராஜகிரகத்திலிருந்து பாடலிபுத்திரத்திற்கு மாற்றினார்.
வாரிசு[தொகு]
உதயணனுக்குப் பின் அவரது மகன் அனுருத்தன் மகத நாட்டை ஆண்டார்.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Agnihotri, V.K.. Indian History. Allied Publishers. பக். 168. https://books.google.com/books?id=MazdaWXQFuQC.
- ↑ Nath Sen, Sailendra (1999). Ancient Indian History and Civilization. New Age International. பக். 114. https://books.google.com/books?id=Wk4_ICH_g1EC&pg=PA114#v=onepage&q&f=false.