ஈஸ்வர சந்திர வித்யாசாகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
பிறப்பு'ஈஸ்வரர் சந்திர பந்தோபாத்யாயா
(1820-09-26)26 செப்டம்பர் 1820
பிர்சிங்கா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
(தற்போது மேற்கு வங்காளம், இந்தியா)
இறப்பு29 சூலை 1891(1891-07-29) (அகவை 70)
கல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
(தற்போது கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா)
தொழில்எழுத்தாளர், அறிஞர், கல்வியாளர், மொழிபெயர்ப்பாளர், வெளியீட்டாளர், சீர்திருத்தவாதி,
மொழிவங்காளம்
கல்வி நிலையம்சமசுகிருத கல்லூரி (1828-1839)
இலக்கிய இயக்கம்வங்காள மறுமலர்ச்சி
குறிப்பிடத்தக்க படைப்புகள்விதவைத் திருமணம், வங்க மொழிச் சீர்திருத்தம்.
துணைவர்தினமாயி தேவி
பிள்ளைகள்1

ஈஸ்வரர் சந்திர பந்தோபாத்யாயா என்கிற ஈஸ்வர சந்திர வித்யாசாகர் (Ishwar Chandra Vidyasagar, செப்டம்பர் 26, 1820 - சூலை 29, 1891)[1] என்பவர் கல்வியாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.[2][3] இவர் பெண் கல்வி முன்னேற்றம், விதவைத் திருமணம் போன்ற சமூக மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் அதிக நாட்டமுடையவர். இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம், மேட்னிபூர் அருகிலுள்ள பிர்சிங்கா எனும் ஊரில் செப்டம்பர் 26, 1820 ஆம் ஆண்டு பிறந்தார். 1839 ஆம் ஆண்டில் இந்து சட்டக்குழு தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1841 ஆம் ஆண்டில் “நியாயா” மற்றும் “ஜியோதிஷ்” தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்ற இவர் வேதங்களையும், சம்ற்கிருத இலக்கியங்களையும் ஆழ்ந்து படித்தார். இவருக்கு சமற்கிருதக் கல்லூரி “வித்யாசாகர்” எனும் பட்டத்தை அளித்தது.

கல்விப் பணி[தொகு]

  • 1841 ஆம் ஆண்டில் ஃபோர்ட் வில்லியம் கல்லூரியில் முக்கியப் பண்டிதராக நியமிக்கப்பட்டார்.
  • 1846 ஆம் ஆண்டில் சமற்கிருதக் கல்லூரியின் செயலாளரானார்.
  • 1851 ஆம் ஆண்டில் சமற்கிருதக் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டார்.
  • 1855 ஆம் ஆண்டில் வங்காளத்தின் தெற்குப் பகுதிக்கு சிறப்புப் பள்ளி ஆய்வாளராகக் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.
  • பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்கிற இவரது முற்போக்கு எண்ணத்தினால் 35 பெண்கள் பள்ளிகளை நிறுவினார்.

எழுத்துப் பணி[தொகு]

இவர் வங்காள மொழியில் 30 நூல்களும், சமஸ்கிருதத்தில் 17 நூல்களும், ஆங்கிலத்தில் 5 நூல்களும் என மொத்தம் 52 நூல்களை எழுதியிருக்கிறார். “விதவா விவாஹ்”, “பிரந்தி விலாஸ்”, “அக்யான் மஞ்சரி”, “சிதார் பான்பாஸ்”, “பீட்டல் பஞ்ச்வின் சாடி”, “வியாக்ரன் கௌமுதி”, “ஹிஸ்டரி ஆஃப் பெங்கால்”, “ஜீவன் சரித்”, “போதோதயா” என்கிற நூல்கள் இவர் எழுதியவற்றுள் மிகவும் சிறப்பு பெற்றவை.

சிறப்புகள்[தொகு]

  • 1864 ஆம் ஆண்டில் "ராயல் ஏசியாடிக் சொசைட்டியின் சிறப்பு" உறுப்பினரானார்
  • 1880 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசியர் இவருக்கு சி. ஐ. ஈ எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தார்.

மறைவு[தொகு]

இவர் மேற்கு வங்காள மாநிலம், கல்கத்தா நகரில் சூலை 29, 1891 ஆம் ஆண்டு காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "29 July 1891: Social Reformer Ishwar Chandra Vidyasagar Passes Away". www.mapsofindia.com. 29 July 2013.
  2. "Ishwar Chandra Vidyasagar". www.whereincity.com. Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 20 December 2008. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Ishwar Chandra Vidyasagar: A Profile of the Philanthropic Protagonist". www.americanchronicle.com. பார்க்கப்பட்ட நாள் 20 December 2008.