பி. ஆர். ஜெயராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. ஆர். ஜெயராஜன் (பிறப்பு: சூன் 14, 1968) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். மதுரை மாவட்டம், நிலக்கோட்டையில் பிறந்த இவர் தந்தை பி. ஆர். ரங்காச்சாரி, தாய் பி. ஆர். காஞ்சனமாலா. தற்போது சேலத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறார். தமிழில் பல கவிதை நூல்களையும் சட்ட நூல்களையும் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய "மனித உரிமைகளும், மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டமும்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பிற சிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஆர்._ஜெயராஜன்&oldid=3614075" இலிருந்து மீள்விக்கப்பட்டது