நாகார்ஜுன சாகர் அணை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நாகார்ஜுன சாகர் அணை | |
நாகார்ஜுன சாகர் அணை |
|
| அதிகாரபூர்வ பெயர் | నాగార్జునసాగర్ ఆనకట్ట நாகார்ஜுன சாகர் அணை |
|---|---|
| உருவாக்கும் ஆறு | கிருஷ்ணா ஆறு |
| உருவாக்குவது | நாகார்ஜுன சாகர் நீர்அணை |
| அமைவிடம் | நலகொண்டா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
| நீளம் | 1,450 மீட்டர்கள்s (4 அடி) |
| உயரம் | ஆற்று மட்டத்திலிருந்து 124 மீட்டர்கள்s (407 அடி) |
| கட்டத் தொடங்கியது | 1956 |
| திறப்பு நாள் | 1960 |
| கட்டுமானச் செலவு | 1300 கோடி ரூபாய் |
| நீர்த்தேக்க தகவல் | |
| கொள்ளளவு | 11,472 மில்லியன் கன மீட்டர் |
| நீர்ப்பிடிப்பு பகுதி | 215000 சதுர கிமீ |
| புவியியல் தரவு | |
| அமைவிடம் | |
நாகார்ஜுன சாகர் அணை ஆந்திர பிரதேச மாநிலத்தில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கல்கட்டு (கல்லணை) அணையாகும் (masonry dam). இதுவே உலகத்தின் மிக உயரமான கல்கட்டு அணையாகும். இதன் உயரம் 124 மீட்டர்.
இந்தியாவில் தொடங்கப்பட்ட பாசன மற்றும் நீர் மின் திட்டங்களில் இது தொடக்ககால திட்டங்களில் ஒன்றாகும். நலகொண்டா மாவட்டம், பிரகாசம் மாவட்டம், கம்மம் மாவட்டம், குண்டூர் மாவட்டம் ஆகியவை இவ்வணையினால் பாசன வசதி பெறுகின்றன.
1955 ம் ஆண்டு இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு இத்திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். இவ்வணை கட்டுமானத்தினால் பல ஆதி புத்த குடியேற்ற இடங்கள் நீரில் மூழ்கின. இவ்வணையில் நீரை தேக்குவதற்கு முன் பல புத்த நினைவு சின்னங்கள் தோண்டி எடுக்கப்பட்டு வேறு இடங்களில் வைக்கப்பட்டன.