திலிப் குமார்
| திலிப் குமார் | |
|---|---|
2006 இல் திலிப் குமார் |
|
| இயற் பெயர் | யூசுப் கான் |
| பிறப்பு | திசம்பர் 11, 1922 Peshawar, பாக்கித்தான் |
| வேறு பெயர் | Dilip Sahab Tragedy King |
| தொழில் | நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், அரசியல்வாதி |
| நடிப்புக் காலம் | 1944 - 1998 (ஓய்வு) |
| துணைவர் | சாய்ரா பானு (1966-இற்றை) |
யுசுப் கான் (Dilip Kumar, இந்தி: यूसुफ़ ख़ान; உருது: یوسف خان (பிறந்தது 11 டிசம்பர், 1922) தீலீப் குமார் எனப் பிரசித்தி பெற்றவர் இந்தி: दिलीप कुमार; உருது: دِلِیپ کُمار ஒரு இந்தியத் திரைப்பட நடிகரும் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாவார். மும்பையில் பாந்த்ரா புறநகர்ப்பகுதியில் பாலி குன்றில் அவர் வசித்து வருகின்றார்.
தனது திரையுலக வாழ்க்கையை 1944ல் தொடங்கிய, குமார் ஒருசில வியாபாரரீதியில் வெற்றிபெற்ற திரைப்படங்களில் பிந்திய 1940கள், 1950கள், 1960கள், மற்றும் 1980களில் நடித்துள்ளார். அவர்தான் பிலிம்பேர் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற முதல் நடிகராவார் மற்றும் பிலிம்பேர் விருதுகள் அந்த வகையில் பன்முறை வாங்கிய சாதனையும் புரிந்துள்ளார்.
அவர் பரவலாகப் பலவகையான பாத்திரங்களில் அதாவது ரொமாண்டிக் புத்தார்வக்காதல் அண்டாஸ் (1949), முரட்டு அடியாள் ஆன் (1952), நாடக ரீதியில் தேவதாஸ் (1955), நகைச்சுவையில் ஆஜாத் (1955), சரித்திரக் காதல் முகல் ஏ ஆஜாம் (1960) மற்றும் சமூக கங்கா ஜமுனா (1961) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். 1970களில் கதாபாத்திரங்கள் வறண்ட நிலையை உருவாக்கியதால் அவர் 1976ல் திரைத்துறையை விட்டு வெளியேறி ஐந்தாண்டு இடைவெளி எடுத்துக்கொள்ள நேர்ந்தது. 1981ல் அவர் மீண்டும் திரும்பி கிராந்தி எனும் மாபெரும் வெற்றிப்படத்தில் குணசித்திரப்பாத்திரம் ஏற்று நடித்தார் மற்றும் தொடர்ந்து மையக்குணச்சித்திர பாத்திரங்களில் அதாவது ஷக்தி (1982), கர்மா (1986) மற்றும் சௌடாகார் (1991) மற்றும் அவரது கடைசிப்படமான க்யிலாவில் 1998ல் நடித்தார்.
பொருளடக்கம் |
ஆரம்பகால வாழ்க்கை [தொகு]
முகமது யுசுப்கான் என அவர் மோஹால்லா குடாடாட் ஊரில் பிறந்தார், அது பெஷாவரில் க்யிஸ்ஸா க்ஹ்வானி பஜாரின் பின்புறம் அமைந்திருந்தது, அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் பகுதியாகவும் 1947லிருந்து பாகிஸ்தானின் பகுதியாகவும் உள்ளது. பன்னிரண்டு குழந்தைகள் கொண்ட ஆப்கன் மூலம் அமைந்த பெஷாவரில் ஹிந்த்கோ பேசும் குடும்பத்தில் அவர் பிறந்தார். அவர் தந்தை, லாலா குலாம் சார்வார் ஒரு பழவியாபாரி ஆவார், அவருக்கு பெரிய தோப்புகள் பெஷாவரிலும் மற்றும் மகாராஷ்டிரா நாசிக் அருகிலுள்ள டியோலாலிலும் உள்ளன. 1930களில் அவரது குடும்பம் மும்பைக்கு மீண்டும் இடம்பெயர்ந்தது மற்றும் 1940களில் யுசுப் கான் புனேவுக்கு நகர்ந்தார் அங்கு ஒரு கேன்டீன் தொழில் தொடங்கி உலர்பழங்கள் வழங்கும் தொழில்புரிந்தார்.
1943ல், தேவிகா ராணி, பாம்பே டாக்கீஸ் நிறுவனர் ஹிமான்ஷு ராயின் மனைவியான அவர், பாலிவுட் திரையுலகில் குமார் நுழைய உதவிகரமாக இருந்தார். அமியா சக்ரவர்த்திதான் அவருக்கு வெள்ளித்திரைப்பெயர் திலீப் குமார் என்பதை வழங்கினார் மற்றும் ஜ்வார் பாட்டா (1944) திரைப்படத்தில் நடிக்கவும் செய்தார். தேவிகாவும் அவரது கணவருமான ரொரிச் இளம்- துருதுருப்பான கானை புனேயின் அவுண்ட் ராணுவக் கேன்டீனில் கண்டுபிடித்தனர்.
தொழில் வாழ்க்கை [தொகு]
அவரது முதல்படம் ஜ்வார் பாட்டா (1944) நிஸார் பாய் மற்றும் ஹேமெத் பாயுடன் அவர் நடித்தார். 1947ல் அவர் ஜூக்னூ எனும் படத்தில் தோன்றினார். 1949ல், அவர் ராஜ் கபூருடன் இணைந்து காதல் இசை நாடகமான அண்டாஸ் மற்றும் 1955ல் தேவ் ஆனந்த் உடன் இன்சநியாட் போன்ற திரைப்படங்களில் நடித்தார். அதுவே அவரை ஒரு நட்சத்திரமாக்கியது. 1950களில் அவர் பாலிவுட்டின் மிகப்பெரிய நட்சத்திரங்களுள் ஒருவராக ராஜ் கபூர் மற்றும் தேவ் ஆனந்த் ஆகியோருடன் நடித்திருந்தார். பிரசித்தி பெற்ற படங்களான டீடார் (1951), அமர் (1954), தேவதாஸ் [[(1955), மற்றும் மதுமதி (1958) அவைகளில் துன்பியல் பாத்திரங்களில்|(1955), மற்றும் மதுமதி (1958) அவைகளில் துன்பியல் பாத்திரங்களில் ]] தோன்றியதால் 'சோக(துன்பியல்) மன்னன்' என்ற பட்டத்தைச் சம்பாதித்தார்.
மிருதுவான மனம்படைத்தப் பாத்திரங்களிலும் ஆன் (1952)ல் மற்றும் ஆஜாத் (1955) திரைப்படத்தில் ஒரு நகைச்சுவைப் பாத்திரத்திலும் நடித்தார். 1960ல் சரித்திரத் திரைப்படமான முகல் ஏ ஆஜாம் திரைப்படத்தில் அவர் நடித்தார் அது 2008ல் ஹிந்தி திரைப்பட வரலாற்றில் இரண்டாவது பெரிய மொத்த வசூல் அள்ளிக் குவித்தது.[1] அப்படத்தில் அவர் முகலாய பட்டத்து இளவரசர் ஜஹாங்கீர்,அக்பரின் மைந்தனான பாத்திரம் ஏற்று நடித்தார்.
1961ல் கங்கா ஜமுனா வெற்றி திரைப்படத்தைத் தயாரித்து அவர் நடித்தார் அதில் அவரது நிஜ-வாழ்க்கை சகோதரர் நசீர் கானுடன் படத்தலைப்புப் பாத்திரங்கள் ஏற்றிருந்தார். படம் வெற்றி பெற்ற போதும் அவர் அதற்குப்பின் வேறுபடங்கள் தயாரிக்கவில்லை. 1962ல் பிரிட்டிஷ் இயக்குநர் டேவிட் லீன் அவருக்கு லாரென்ஸ் ஆப் அரேபியா, மாபெரும் காவிய வெற்றிப்படத்தின ஷெரிப் அலி பாத்திரம் அளித்தும் குமார் அதை ஏற்க மறுத்தார். அப்பாத்திரம் இறுதியில் உமார் ஷெரிப்பிற்கு, ஒரு எகிப்திய நடிகருக்குப் போனது. 1960களில் பாக்ஸ் ஆபிஸ் தோல்விகள் அடைந்த ஒரு குறுகிய காலத்திற்குப்பின், அவர் பிறப்பில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் பாத்திரத்தில் ராம் அவுர் ஷியாம் திரைப்படத்தில் (1976) நடித்தார் அது அவ்வருடத்திய மிகப்பெரும் பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப்படங்களில் ஒன்றாக அமைந்தது. அந்த ராம் அவுர் ஷியாம் படத்தின் வெற்றி எண்ணிறந்த மறுதயாரிப்புகள் மற்றும் போலிகள் அடுத்தடுத்து பல்கிப்பெருக வழிவகுத்தது.
1970களில் குமார் சில திரைப்படங்களில் மேடைப்பிரகாசம் பெறத்தொடங்கும் புதிய நடிகர்களான தர்மேந்திரா, ராஜேஷ் கன்னா மற்றும் அமிதாப் பச்சன் அவர்களுடன் நடித்தார். அவரது 1976 வருடத்திய திரைப்படம் பைராக் அதில் அவர் மூன்று வேடங்கள் ஏற்றும் மோசமாகத் தோல்வியடையவே, அவர் நடிப்பதில் ஐந்தாண்டு இடைவெளி மேற்கொண்டார்.
1981ல் அவர் பல-நட்சத்திரப் படமான கிராந்தி மூலம் மறுபிரவேசம் செய்தார், அது அவ்வாண்டு மிகப்பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. குணச்சித்திர வேடங்களில் தொடர்ந்து நடிக்கலானார், வயது முதிர்ந்த குடும்ப தலைவர் அல்லது போலீஸ் அதிகாரி என நடித்து பாக்ஸ் ஆபீஸ் வெற்றிகள் மணியிழை போல தொடர்ந்து குவித்தார், அதில் ஷக்தி (1982) திரைப்படம் அடங்கும் (அதில் அவர் அப்போதைய மேலோங்கி இருந்த சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் நடித்தார்), விதாத்தா (1982), மாஷல் (1984), மற்றும் கர்மா (1986). போன்றவைகளே அவைகளாகும்.
அவரது கடைசி முக்கியப் படமான, சௌடாகார் (1991), அவர் பிரபல நடிகர் ராஜ் குமாருடன் இணைந்து, மூன்று முப்பதாண்டுகளுக்குப் பிறகு அதாவது அவர்கள் கடைசியாக நடித்த பைகாம் (1959), படத்திற்குப்பிறகு தோன்றினார். 1993ல் அவர் பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதுவென்றார்.
1996ல் அவர் கலிங்கா என்ற திரைப்படத்தை முதன்முதலில் இயக்கினார் அப்படம் ஓதுக்கப்பட்டதாகிவிட்டது. 1998ல் அவர் தனது திரைப்படத்தோற்றத்தின் இறுதியாக நடித்த க்யில்லாவும் படுதோல்வியைத் தழுவியது. அவரது உயர்தனிச்சிறப்பு வாய்ந்த திரைப்படம் முகல்-ஏ-ஆஜாம் 2004ல் முழுமையாக வண்ணமயமாகி அது மறுவெளியீடு கண்டு, பாக்ஸ் ஆபீஸில் நன்றாக ஓடியது. அவரது மற்றொரு தனிச்சிறப்பு வாய்ந்த படங்களுள் ஒன்றான, நயா தௌர், முழுவண்ணமயமாகி ஆகஸ்ட் 2007ல் வெளியிடப்பட்டது.
1940கள் மற்றும் 1950களில் பாலிவுட்டில் பொற்காலம் கண்ட பிரான் மற்றும் தேவ் ஆனந்த் போல எஞ்சியுள்ள நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்து வருகின்றார். ஆனால் பழம்பெரும் நடிகை ஆஷா பரேக் அவருக்கு திலீப் குமாரைப் பிடிக்கவில்லை என விமர்சனம் செய்தார் மற்றும் அதனாலே அவர் குமாருடன் சேர்ந்து நடிக்கவில்லை என்றும் கூறினார்.
பொது வாழ்க்கை [தொகு]
குமார் இந்திய மற்றும் பாகிஸ்தானிய மக்களை நெருக்கமுறக் கொணர்வதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளுவதில் முழுவீச்சாகச் செயல்பட்டார். 2000லிருந்து பாராளுமன்ற மேல்சபையில் ஓர் உறுப்பினராகவும் உள்ளார் மற்றும் தனது பரவலான தானதரும காரியங்களுக்காக பிரபலமாகவும் திகழ்கின்றார்.
1994ல் அவருக்கு தாதாசாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டது. 1998ல் பாகிஸ்தான் அரசாங்கத்தின் மிக உயரிய சிவிலியன் விருதான நிஷான்-ஏ-பாகிஸ்தான், வழங்கப்பெற்றார். அவர் இந்தியர்களில் அவ்விருது பெறும் இரண்டாவதாவார் ; முதலாவது முன்னாள் பாரதப்பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு அளிக்கப்பட்டது கார்கில் யுத்தம் நடந்தபோது, சிவசேனா தலைவர் பால்தாக்கரே அவரது நிஷான்-ஏ-பாகிஸ்தான் விருதைத் திருப்பித்தர வலியுறுத்தினார், அவர் வாதிடுகையில் சொன்னது "அவர் கட்டாயம் நிஷான்-ஏ-பாகிஸ்தான் விருதை, அந்நாடு வலுவில் வந்து இந்திய மண் ஆக்கிரமிப்பு செய்ததால், திருப்பியளிக்கவே வேண்டும்."[2] அதற்கு குமார் மறுப்பு தெரிவித்தார்.
"இந்த விருது எனது மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக தரப்பட்டது அதற்கென என்னை நான் அர்ப்பணித்துள்ளேன். ஏழைகளுக்காக நான் பாடுபட்டிருக்கிறேன், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு நாடுகளுக்கிடையே பண்பாடு மற்றும் இன இடைவெளிகளுக்குப் பாலம் அமைக்கும் பணியை பல்லாண்டு காலமாகவே செய்து வருகின்றேன். அரசியல் மற்றும் மதம் இத்தகு எல்லைகளை உருவாக்கியுள்ளன. எவ்வழியாயினும் இருநாட்டு மக்கள் ஒன்றுபட என்னாலியன்றதைச் செய்து கொண்டுதான் இருக்கின்றேன்.[3] எனக்குச் சொல்லுங்கள், இது கார்கில் சண்டைக்கு எவ்வகையில் எதைச்செய்கின்றது?"[3]
சொந்த வாழ்க்கை [தொகு]
குமார் நடிகையும் அழகு ராணியுமான சாயிரா பானுவை 1966ல் மணம் புரிந்து கொண்டார்.
குமாரின் இளைய சகோதரர் நசீர் கான் கூட ஒரு நடிகர் மற்றும் கங்கா ஜமுனாவில் (1961) மற்றும் பைராகியில் (1976) குமாருக்கு எதிர் பாத்திரமாக நடித்தார்.
விருதுகள் [தொகு]
குமார் அவரது திரைவாழ்க்கையில் பல விருதுகள் பெற்றார், அதில் பிலிம்பேர் மிகச்சிறந்த நடிகருக்கான விருது எட்டுமுறைகளும் மற்றும் 19 தடவைகள் பெயர் முன்மொழியப்பட்டதும் உள்ளடங்கும். 1992ல் பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்று கவுரவிக்கப்பட்டார். 1994ல் இந்திய அரசாங்கம் அவருக்குத் தாதா சாஹேப் பால்கே விருது அளித்து கவுரவித்தது - அதுவே இந்தியாவில் திரைத்துறையில் முதன்மைச்சிறப்பிற்குத் தரப்படும் உயரிய விருதாகும். 1980ல் மும்பையின் ஷெரிப்பாகவும் நியமிக்கப்பட்டார். 1997ல் திலீப்குமாருக்கு பாகிஸ்தானின் உயரிய சிவிலியன் விருதான, நிஷான்-ஏ-பாகிஸ்தான் என்ற விருது வழங்கப்பெற்றது.
1997 இல் அவர் என்டிஆர் தேசிய விருது பெற்றார். அவருக்கு 2009ல் சிஎன்என்-ஐபிஎன் உடைய வருடத்தின் சிறந்த இந்தியன்-வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது
திரைப்பட விவரங்கள் [தொகு]
| நடிப்பு விவரம் | |
| Jwar Bhata (1944) | Jagdish |
| Pratima (1945) | |
| Milan (1947) | Ramesh |
| Jugnu (1947) | Sooraj |
| Shaheed (1948) | Ram |
| Nadiya Ke Paar (1948) | |
| Mela (1948) | Mohan |
| Ghar Ki Izzat (1948) | Chanda |
| Anokha Pyar (1948) | Ashok |
| Shabnam (1949) | Manoj |
| Andaz (1949) | Dilip |
| Jogan (1950) | Vijay |
| Babul (1950) | Ashok |
| Arzoo (1950) | Badal |
| Tarana (1951) | Motilal |
| Hulchul (1951) | Kishore |
| Deedar (1951) | Shamu |
| Sangdil (1952) | Shankar |
| Daag (1952) | Shankar |
| Aan (1952) | Jai Tilak |
| Shikast (1953) | Dr. Ram Singh |
| Footpath (1953) | Noshu |
| Amar (1954) | Amarnath |
| Udan Khatola (1955) | |
| Insaniyat (1955) | |
| Devdas (1955) | Devdas |
| Azaad (1955) | |
| Naya Daur (1957) | Shankar |
| Musafir (1957) | |
| Yahudi (1958) | Prince Marcus |
| Madhumati (1958) | Anand/ Deven |
| Paigham (1959) | Ratan Lal |
| Kohinoor (1960) | |
| Mughal-E-Azam (1960) | Prince Salim |
| Gunga Jumna (1961) | Gunga |
| Leader (1964) | Vijay Khanna |
| Dil Diya Dard Liya (1966) | Sahnkar/Rajasaheb |
| Ram Aur Shyam (1967) | Ram/ Shyam |
| Sunghursh (1968) | |
| Sadhu Aur Shaitan (1968) | |
| Aadmi (1968) | Rajesh/ Raja Saheb |
| Sagina Mahato (1970) | |
| Gopi (1970) | Gopi |
| Daastan (1972) | Anil/Sunil |
| Anokha Milan (1972) | |
| Sagina (1974) | |
| Phir Kab Milogi (1974) | |
| Bairaag (1976) | |
| Kranti (1981) | Sanga/Kranti |
| Vidhaata (1982) | Shamsher Singh |
| Shakti (1982) | Ashvini Kumar |
| Mazdoor (1983) | Dinanath Saxena |
| Duniya (1984) | Mohan Kumar |
| Mashaal (1984) | Vinod Kumar |
| Dharam Adhikari (1986) | |
| Karma (1986) | Vishwanath Pratab Singh aka Rana |
| Kanoon Apna Apna (1989) | |
| Izzatdaar (1990) | Brahmadutt |
| Aag Ka Dariya (1990) | |
| Saudagar (1991) | Thakur Veer Singh |
| Qila (1998) | Jaganath/Amarnath Singh |
அரைகுறையான / வெளிவராத திரைப்படங்கள் [தொகு]
- பேங்க் மேனேஜர் (இயக்குனர்&தயாரிப்பாளர் ஆர்சி டால்வார் )
- தாஜ் மஹால் (இயக்குனர் & தயாரிப்பாளர் கே. ஆசிப் )
- அக்ஹ்ரி முகல் (இயக்குனர்&தயாரிப்பாளர் கே.ஆசிப் )
- ஹர சிந்கார் (இயக்குனர் கபீர் கான் &தயாரிப்பாளர்'அசித்ய சோப்ரா ' )
- ஷிக்வா (இயக்குனர் ஏஆர்.முருக தாஸ்&தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா )
- ஜனவர் (இயக்குனர்&தயாரிப்பாளர் கே. ஆசிப் )
- கிட்னாப் (இயக்குனர் சஞ்சய் கதவி &தயாரிப்பாளர்கிஷோர் குமார் )
- கலிங்க (தயாரிப்பாளர் சுதாகர் போகதே இயக்குனர் திலிப் குமார் )
- ஆக க தரய (இயக்குனர்ராஜிந்தர் சிங்க் பாபு &தயாரிப்பாளர் பிரேமலிய )
- அசர் (இயக்குனர் குக்கு கொஹ்லி )
- கால ஆத்மி (இயக்குனர்& தயாரிப்பாளர் நசிர் ஹுசைன் )
குறிப்புகள் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
- விளக்கமான இணையதளம் திலிப் குமார்
- இணையத் திரைப்பட தரவுத்தளத்தில் Dilip Kumar
- வாழ்க்கை வரலாறு
- புராண கீர்த்தி, சோக மன்னன் வாழ்கின்றார்
- திலிப் குமாரின் வலைப்பூ மேற்கோள் பகுதிகள்
- புராண கீர்த்தி திலிப் குமார் வலைப்பூ
|
||||||||||||||