திருவாலந்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவாலந்துறை
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்பெரம்பலூர்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்621117

திருவாலந்துறை (Thiruvalandurai) என்பது தமிழ்நாட்டின், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இந்த ஊரானது திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை எண் 45லிருந்து 9 கி.மீ. மேற்கில் வசிஸ்ட நதியின் கரையில் அமைந்துள்ளது. இவ்வூரினை சுற்றி வ. களத்தூர், பசும்பலூர், தைக்கால், அயன் பேரையூர், கீழ் கல்பூண்டி ஆகிய ஊர்கள் அமைந்துள்ளன.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான பெரம்பலூரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும், வேப்பந்தட்டையில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத்தின் தலைநகரான சென்னையில் இருந்து 270 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 525 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 2103 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 1015, பெண்களின் எண்ணிக்கை 1088 என உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதமானது 65.9% என உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[1]

ஊரில் உள்ள வழிபாட்டுதலங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவாலந்துறை&oldid=2813434" இலிருந்து மீள்விக்கப்பட்டது