ச. ஜெயச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீதிபதி
ச. ஜெயச்சந்திரன்
கேரள உயர் நீதிமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
20 அக்டோபர் 2021
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சந்திரசேகரன் கர்த்தா ஜெயச்சந்திரன்

28 மே 1972 (1972-05-28) (அகவை 51)
முன்னாள் கல்லூரிகேரள சட்ட அகாதமி
மகாத்மா காந்தி பல்கலைக்கழகம்
இணையத்தளம்High Court of Kerala

சந்திரசேகரன் கர்த்தா ஜெயச்சந்திரன் (C. Jayachandran; സി. ജയചന്ദ്രൻ; 28 மே 1972 இல் பிறந்தவர்) ஓர் இந்திய நீதிபதி ஆவார். இவர் தற்போது கேரள உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பணியாற்றுகிறார். இந்திய மாநிலமான கேரளா மற்றும் இலட்சத்தீவு உச்ச நீதிமன்றத்தின் தலைமையகம் எர்ணாகுளத்தில், கொச்சியில் உள்ளது.[1] ஜெயச்சந்திரன் 20 அக்டோபர் 2021 முதல் உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் பிப்ரவரி 2011-ல் கூடுதல் மாவட்ட நீதிபதியாக நேரடியாக நீதித்துறை பணியில் சேர்ந்தார். மேலும் கொல்லம், திருவனந்தபுரம் மற்றும் கோட்டயத்தில் முதன்மை மாவட்ட நீதிபதியாக பணியாற்றினார்.[2]

கேரள சட்ட அகாதமியின் சட்டக் கல்லூரியில் இளங்கலைச் சட்டம் மற்றும் கேரளாவில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் முதுகலைச் சட்டக் கல்வியினை முடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Official".
  2. "Four judicial officers appointed as HC judges". The Hindu. 13 October 2021.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._ஜெயச்சந்திரன்&oldid=3805692" இலிருந்து மீள்விக்கப்பட்டது