கலீலியோ கலிலி
கலீலியோ கலிலி (பெப்ரவரி 15, 1564 - ஜனவரி 8, 1642), அறிவியற் புரட்சியோடு நெருக்கமான தொடர்புடைய, ஓர் இத்தாலிய வானியலாளரும் மெய்யியலாளரும் இயற்பியலாளரும் ஆவார். "இயற்பியலின் தந்தை" என்ற வகையிலும், அறிவியலின் தந்தை என்ற வகையிலும், இவர் "நவீன வானியலின் தந்தை" எனக் குறிப்பிடப்படுகின்றார். (கெப்ளர் இப் பட்டத்துக்குக் கூடிய தகுதியுடயவர் என்றும் கருதப்படுகிறது.) இவருடைய பரிசோதனைகள், அறிவியல் சார்ந்த வழிமுறைகளை நிலைநிறுத்திய பேக்கனின் எழுத்துக்களுக்குத் துணையாக அமைந்ததாகப் பரவலாகக் கருதப்படுகின்றது. பீசா நகரில் பிறந்த கலீலியோ கெப்ளரின் சமகாலத்தவராவார். கலீலியோவின் வேலைகள், குறிப்பாக அரிஸ்டாட்டிலின் வேலைகளிலிருந்து, குறிப்பிடத்தக்க திருப்பமாகும்.
[தொகு] பரிசோதனை அறிவியல்
கணிய அளவுப் பரிசோதனைகளையும் அவற்றின் முடிவுகளை கணித முறையில் பகுப்பாய்வு செய்வதையும் தொடக்கிவைத்தவர் என்றவகையில், [அறிவியற் புரட்சி]யின் அறிஞர் குழாமில் கலீலியோவுக்கு உயர்ந்த இடம் உண்டு. அக்காலத்து மேற்கத்தைய சிந்தனையில், இத்தகைய வழிமுறை மரபு கிடையாது. இவருக்கு நேரடியாக முந்திய காலத்தவரான, பெரும் பரிசோதனையாளர்,[[வில்லியம் கில்பர்ட்] கணிய அளவு வத்திக்கான் நகர் -ஆல் தண்டிக்கபட்டார்(கத்தோலிக்க மத குரு மாடம்)