கரையாம்புதூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரையாம்புதூர்
Karaiyamputhur
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்புதுச்சேரி
மாவட்டம்பாண்டிச்சேரி
வட்டம் (தாலுகா)பாகூர்
ஒன்றியம்பாகூர்
மொழிகள்
 • அலுவல் பூர்வம்பிரெஞ்சு, தமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அ.கு.எண் -->605 106
தொலைபேசிக் குறியீடு0413
வாகனப் பதிவுPY-01
பாலின விகிதம்50% /

கரையாம்புதூர் (Karaiyamputhur) என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியில் உள்ள பாகூர் தாலுகாவில் இருக்கும் பாகூர் கொம்யூனில் இருக்கும் ஒரு கிராமம் [1] ஆகும். புதுச்சேரியின் 11 அயலகச் சிற்றூர்களில் கரையாம்புதூரும் ஒன்றாகும். புதுச்சேரி – பண்ருட்டி சாலைக்கு கரையாம்புதூர் கிராமம் நுழைவாயிலாக இருக்கிறது. புதுச்சேரி மாவட்டத்தின் தென்மேற்கு முனையில் இக்கிராமம் அமைந்துள்ளது.

இடப்பெயரியல்[தொகு]

ஒரு ஆற்றங்கரையில் புதியதாக தோன்றிய பகுதி என்பது கரையாம்புதூர் என்ற பெயரின் பொருளாகும். இங்கு கரை எனக் குறிக்கப்படுவது பெண்ணையாற்றின் கரையை ஆகும். பெண்னையாற்றின் கரைப்புதூர் என்பது சுருக்கமாக கரையாம்புதூர் என அழைக்கப்படுகிறது.

புவியியல்[தொகு]

ஒன்றியத் தலைமையிடமான பாகூருடன் எல்லைபுற சாலை வழியாக கரையாம்புதூர் இணைக்கப்பட்டுள்ளது. கரையாம்புதூருக்கு நான்கு திசைகளிலும் எல்லைகளாகத் தமிழக கிராமங்கள் சூழ்ந்துள்ளன.

கிராமங்கள்[தொகு]

கரையாம்புதூர் கிராமப் பஞ்சாயத்தில் பின்வரும் கிராமங்கள் இடம்பெற்றுள்ளன.

அரசியல்[தொகு]

புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்குட்பட்டும்,நெட்டப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் கரையாம்புதூர் கிராமம் இருக்கிறது.

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2016-03-28.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரையாம்புதூர்&oldid=3699545" இலிருந்து மீள்விக்கப்பட்டது