கடனீரேரி
புவியியல் அடிப்படையில், கடல்நீரேரி (fjord, ஃபியோர்ட்) எனப்படுவது பனியாற்றுப் படுவுகள் காரணமாக உருவாகும் நீளமான, ஒடுங்கிய, ஆழமான பள்ளத் தாக்குகளில் நீரானது உட்புகுந்து இரு மருங்கும் நிலப்பகுதியால் சூழப்பட்ட நீர்நிலையைக் கொண்டிருப்பதாகும். இந்த நீரானது ஒரு இடத்தில் கடலுடன் தொடர்பு கொண்டதாகவே காணப்படும். அப்பகுதி கடல்நீரேரியின் வாசல் என அழைக்கப்படும். இவ்வகையான கடல்நீரேரிகள் வடக்கு நோக்கி நோர்வே, கிறீன்லாந்து நாடுகளிலும், மேற்குப் புறத்தில் கனடா, அமெரிக்காவின் அலஸ்கா பகுதியிலும், தெற்கு நோக்கி நியூசிலாந்து, சிலி நாடுகளிலும் காணப்படுகின்றன[1].
கடல்நீரேரி என்னும் பதமானது ஸ்கான்டினாவியாவில் பாயன்படுத்தப்படும்போது ஆங்கிலத்திலிருந்து சிறிது மாறுபட்ட பொருளிலும் பயன்படுத்தப்ப்படுகிறது. நீளமான, ஒடுங்கிய நன்னீர் ஏரிகளும் கூட சில சமயம் கடல்நீரேரிகள் என அழைக்கப்படுவதுண்டு[2].