எழுமாத்தூர் கனகாசல குமரன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எழுமாத்தூர் கனகாசல குமரன் திருக்கோயில், ஈரோடு
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:ஈரோடு மாவட்டம்
அமைவு:[எழுமாத்தூர் ]], ஈரோடு
கோயில் தகவல்கள்
மூலவர்:குமரன் , முருகன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தென் இந்தியா, கோயில்கள்
வரலாறு
கட்டப்பட்ட நாள்:1000 ஆண்டுகளுக்கு முன்

எழுமாத்தூர் கனகாசல குமரன் திருக்கோயில், ஈரோடு, இந்தியாவின் தமிழ்நாட்டில், ஈரோடு மாவட்டம், எழுமாத்தூர் ஊராட்சியில் அமைந்துள்ளது.

திருவிழா[தொகு]

இக்கோவிலில் ஒவ்வோர் ஆண்டும் பங்குனி மாதம், பங்குனி உத்திரத் தேர்த் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், தலை ஆடி, ஆடி 18, ஆவணி அவிட்டம், ஆடிவெள்ளிகள், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, சூரசம்ஹாரம், கல்யாண உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, ஆங்கில புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, கிருத்திகை, அமாவாசை, சஷ்டி ஆகிய முக்கிய நாட்களில் உற்சவங்கள் நடக்கின்றன. தமிழ்ப் புத்தாண்டு விழாவின் போது மிகவும் சிறப்பான உற்சவமாக கொண்டாடுகின்றனர்.

திறக்கும் நேரம்[தொகு]

காலை 6 மணி முதல் 12மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.



வெளி இணைப்புகள்[தொகு]