வலைவாசல்:கருநாடக இசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


தொகு  

கருநாடக இசை வலைவாசல்


வீணை வரைபடம்
வீணை வரைபடம்

கருநாடக இசை தென்னிந்திய இசை வடிவமாகும். உலகின் தொன்மையான இசைவடிவங்களிலொன்றாகக் கருதப்படுகின்றது. தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் என்னும் மூவரும் கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் எனக் கருதப்படுகிறார்கள். இவர்கள் இயற்றிய ஆயிரக்கணக்கான பாடல்கள் இன்றுவரை கர்நாடக இசையின் உயிர் நாடியாக உள்ளன. இம்மூவருக்கும் முன்னர் ஆதி மும்மூர்த்திகள் என முத்துத் தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப் பிள்ளை என்னும் முப்பெரும் இசை அறிஞர்கள் சீர்காழியில் வாழ்ந்து கருநாடக இசையை செப்பமுற வளர்த்தனர். இவர்கள் தியாகராஜ சுவாமிகள் போன்றோருக்கு வழிகாட்டிய முன்னோடிகள். ஆதி மும்மூர்த்திகள் பாடிய இசைப்பாடல்கள் புகழ்பெற்ற தமிழ்ப்பாடல்கள்.

கருநாடக இசை பற்றி மேலும்...
தொகு  

சிறப்புக் கட்டுரை


இசைக் கலைஞர் ஒருவரை, ஆண்டுதோறும் தெரிவுசெய்து அவருக்கு இசைப்பேரறிஞர் எனும் விருதினை சென்னையிலுள்ள தமிழ் இசைச் சங்கம் வழங்கிச் சிறப்பிக்கிறது. தமிழிசையினைப் பரப்பும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் 12 நாட்களுக்கு தமிழ் இசைச் சங்கத்தால் தமிழிசை விழா நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழாவின் தொடக்க நாளன்று, அந்த ஆண்டிற்கென தெரிவுசெய்யப்பட்ட இசைக் கலைஞருக்கு "இசைப்பேரறிஞர்" என்னும் விருதும், பொற்பதக்கம், பொன்முடிப்பும் அளிக்கப்பெறுகிறது.

தொகு  

பகுப்புகள்


கருநாடக இசை பகுப்புகள்


தொகு  

கலைஞர்கள்


தியாகராஜர்
தியாகராஜ சுவாமிகள் (1767 -1848) தியாக பிரம்மம் என்று போற்றப்படுபவர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர். தென்னிந்திய இசைக்கு அளப்பரிய சேவைகள் ஆற்றிய இவர் ஒரு சிறந்த இசை ஞானியாக விளங்கியவர்.
தொகு  

நீங்களும் பங்களிக்கலாம்


  • கருநாடக இசை தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கருநாடக இசை தொடர்பான குறுங்கட்டுரைகளை விரிவுபடுத்தலாம்.
  • கருநாடக இசை தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • கருநாடக இசை தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • கருநாடக இசை தொடர்பான பகுப்புகளை ஒழுங்கமைத்து சீர்படுத்தலாம்
தொகு  

உங்களுக்குத் தெரியுமா...?


  • கருநாடக இசை நிகழ்ச்சிகளில் பக்கவாத்தியக் கலைஞர்களால் ஒரு குறிப்பிட்ட கால அளவு வழங்கப்படும் இசைப்பகுதி, தனி ஆவர்த்தனம் என அழைக்கப்படுகிறது. இதனை 'தனி' என்றும் பேச்சு வழக்கில் அழைப்பர்.
  • காம்போதி கருநாடக இசையில் மிகப் பிரபலமான ஒரு இராகமாகும். இது 72 மேளகர்த்தா இராகங்களில் 28வது மேளமாகிய அரிகாம்போதி இராகத்தின் ஜன்னிய இராகமாகும்.
  • கொன்னக்கோல் என்பது கருநாடக இசையில் பயன்படுத்தப்படும் ஒரு உப பக்க வாத்தியம். இதற்கு கலைஞர்களின் குரலே இசைக்கருவி ஆகும். அதாவது வாயால் உச்சரிக்கப்படும் தாளலயம் அல்லது வாயால் சொற்கட்டுகளுடன் வாசிப்பது கொன்னக்கோல் எனலாம்.
தொகு  

சிறப்புப் படம்


[[Image:|350px|{{{texttitle}}}]]

திருவாவடுதுறை டி. என். ராஜரத்தினம் பிள்ளை என்று பரவலாக அறியப்பட்ட டி. என். ராஜரத்தினம் பிள்ளை (1898-1956) ஒரு நாதசுரக் கலைஞர் ஆவார். நாதசுரச் சக்கரவர்த்தி எனப் பலரும் குறிப்பிடும் அளவுக்கு மிகுந்த புகழுடன் விளங்கினார். சில தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

படம்: User:Mohan gandhi
தொகுப்பு


தொகு  

திரைப்படப் பாடல்களில் இராகங்களின் பயன்பாடு


பாடல் இராகம் இசையமைப்பாளர் பாடலைப் பாடியவர்கள் பாடல் இடம்பெற்ற திரைப்படம்
மாங்குயிலே... கீரவாணி இளையராஜா எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி கரகாட்டக்காரன்
கனா காணும் காலங்கள்... மதுவந்தி யுவன் ஷங்கர் ராஜா மதுமிதா, உஸ்தத் சுல்தான் கான் 7ஜி ரெயின்போ காலனி
துள்ளித்துள்ளி நீ பாடம்மா... மத்தியமாவதி இளையராஜா எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி சிப்பிக்குள் முத்து
தொகு  

செய்திகளில் கருநாடக இசை


விக்கிசெய்திகளில் கருநாடக இசை வலைவாசல்
தொகு  

தொடர்புடைய வலைவாசல்கள்


தமிழ்தமிழ்
தமிழ்
தமிழ்நாடுதமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியாஇந்தியா
இந்தியா
இலங்கைஇலங்கை
இலங்கை
தமிழ் தமிழர் தமிழ்நாடு இந்தியா இலங்கை
தொகு  

பிற விக்கிமீடிய திட்டங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:கருநாடக_இசை&oldid=1833687" இலிருந்து மீள்விக்கப்பட்டது