திலகநாயகம் போல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லயனல் திலகநாயகம் போல்
இசைக்கச்சேரி ஒன்றில் திலகநாயகம் போல் பாடுகிறார்
பிறப்புயாழ்ப்பாணம்
இறப்பு5 திசம்பர் 2009(2009-12-05) (அகவை 68)
யாழ்ப்பாணம்
தேசியம்இலங்கைத் தமிழர்
கல்விசங்கீத பூசணம்(அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)
பணிஉதவிக் கல்விப் பணிப்பாளர்
பணியகம்அரசுப் பணி
அறியப்படுவதுகருநாடக இசை, மெல்லிசைப் பாடகர்,
பெற்றோர்போல்
தங்கமலர்
வாழ்க்கைத்
துணை
லூர்து இருதயறோசா, பத்தினியம்மா

லயனல் திலகநாயகம் போல் (6 சூலை 1941 - டிசம்பர் 5, 2009[1], அகவை 68) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர். அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பயின்று சங்கீத பூசணம் பட்டம் பெற்ற முதல் யாழ்ப்பாணத்தவர் என்று அறியப்படுபவர்.

வானொலியில்[தொகு]

இலங்கை வானொலியில் இசைக்கச்சேரிகளை வழங்கியதோடு, பல மெல்லிசைப் பாடல்களையும் பாடியிருக்கிறார். ரூபவாகினி தொலைக்காட்சி, மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்பவற்றின் முதற்தர கலைஞராகவும் இவர் திகழ்ந்துள்ளார்.

ஆசிரியப்பணி[தொகு]

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இசையாசிரியராக பணியாற்றிய இவர், பதவி உயர்வுபெற்று உதவிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். யாழ் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி விரிவுரையாளராகவும், பரீட்சகராகவும் கடமையாற்றியுள்ளார்.

பட்டங்களும் விருதுகளும்[தொகு]

இவர், சுர ராகநய விநோத சுரபி, இலங்கை அரசின் கலாபூசணம், கலைச்செம்மல் ஆகிய பட்டங்களையும் பெற்று கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இசைக்கச்சேரிகள்[தொகு]

இவர் இலங்கையில் மட்டுமல்லாமல், சிங்கப்பூர், மலேசியா, மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் இசைக்கச்சேரிகளை வழங்கியிருக்கிறார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திலகநாயகம்_போல்&oldid=2868753" இலிருந்து மீள்விக்கப்பட்டது