பேச்சு:வைரி
எங்கள் ஊரில் இப்பறவையை வல்லூறு என்றும் வைரி என்றும் அழைப்பர். ஒருமுறை பள்ளியில் ஒரு தென்னை மரப்பொந்தில் இருந்து முனகல் சத்தம் கேட்டு குச்சியை விட்டுக் குடைந்தோம். உள்ளிருந்து வௌவால் குட்டிகள் விழுந்தன. பாவமென்று ஒன்றைக் கையிலெடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். எங்கிருந்தோ இதைப் பார்த்துக் கொண்டிருந்த வல்லூறு ஒன்று சட்டெனப் பறந்து வந்து என் கையில் இருந்த வௌவால் குட்டியைப் பிடுங்கிச் சென்று விட்டது. இது என் நினைவில் இருந்து அகலாத ஒரு நிக்ழ்வு. -- சுந்தர் \பேச்சு 05:25, 24 ஆகஸ்ட் 2010 (UTC)