திருப்பராய்த்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருப்பராய்த்துறை (Thirupparaitturai) இந்தியாவின் தமிழகத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அந்தநல்லூர் ஊராட்சியில் காவேரி ஆற்றின் தென் கரையில் அமைந்த கிராமம் ஆகும். திருப்பராய்த்துறை கிராமத்தின் அஞ்சல் சுட்டு எண் 639115 ஆகும்.

திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையும், திருச்சி-பாலக்காடு இருப்புப்பாதையும் திருப்பராய்த்துறை கிராமத்தின் வழியாகச் செல்கிறது. இக்கிராமம் திருச்சியிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

சிறப்புகள்[தொகு]

திருப்பராய்த்துறை கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற திருப்பராய்த்துறை பராய்த்துறைநாதர் கோயில் [1] மற்றும் சுவாமி சித்பவானந்தர் நிறுவிய இராமகிருஷ்ண தபோவனம் உள்ளது.[2]

மக்கள் தொகையியல்[தொகு]

திருப்பாராய்த்துறை கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 3,403 ஆகும். அதில் ஆண்கள் 1679; பெண்கள் 1724 ஆக உள்ளனர். பட்டியல் தலித் சமூகத்தினர் 667 ஆகவும், பட்டியல் பழங்குடிகள் 715 ஆகவும் உள்ளனர். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "அருள்மிகு பராய்த்துறை நாதர் திருக்கோயில்". Archived from the original on 2017-05-18. பார்க்கப்பட்ட நாள் 2017-06-15.
  2. ஸ்ரீ இராமகிருஷ்ண தபோவனம்
  3. 2011 Census of Trichy District Panchayat Unions

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்பராய்த்துறை&oldid=3874312" இலிருந்து மீள்விக்கப்பட்டது