திபெத் மீதான சீனாவின் படையெடுப்பு (1910)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திபெத் மீதான சீனாவின் படையெடுப்பு (1910)
நாள் 1910
இடம் திபெத்
சீனாவை ஆண்ட குயிங் பேரரசுக்கு வெற்றி
பிரிவினர்
குயிங் பேரரசு திபெத்
தளபதிகள், தலைவர்கள்
குயிங் பேரரசு 13-வது தலாய் லாமா

திபெத் மீதான சீனாவின் படையெடுப்பு, 1910 (1910 Chinese expedition to Tibet)[1] சீனாவை ஆண்ட குயிங் வம்சத்தினர் திபெத்தில் தங்களின் நேரடி ஆட்சியை நிறுவுவதற்கான 1910-இல் திபெத் மீது போர் தொடுத்தனர். போரின் போது 12 பிப்ரவரி 1910 அன்று திபெத்தின் தலைநகரான லாசாவைக் கைப்பற்றியும், 13-வது தலாய் லாமாவையும் விரட்டியும் திபெத்தை தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டில் சீனர்கள் கொண்டு வந்தனர்.[2]

வரலாறு[தொகு]

1720 முதல் திபெத், சீனாவின் குயிங் பேரரசின் ஆட்சிப் பகுதியாக இருந்தது. 1904-இல் ஆங்கிலேயர்கள்-சீனர்கள் செய்து கொன்ட லாசா உடன்படிக்கை மூலம், திபெத்தில் சீனர்களின் அரசியல் செல்வாக்கு மிகவும் குறைந்தது. எனவே திபெத்தை சீனாவின் குயிங் பேரரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வர 1910-இல் சீனா திபெத்தின் மீது படையெடுத்து ஆக்கிரமிப்பு செய்தது. எனவே திபெத்தின் ஆன்மீகம் மற்றும் அரசியல் தலைவரான 13-வது தலாய் லாமா லாசாவிலிருந்து இந்தியாவில் அடைக்கலம் அடைந்தார். [3][4]

இருப்பினும் 1911-912 ஆண்டுகளில் சிங்காய் மற்றும் லாசா பகுதிகளில் சீனப் பேரரசுக்கு எதிராக பரவிய பெருங்கிளர்ச்சிகளை எதிர்கொள்ள முடியாத அனைத்து சீனப் படைகளும் 1912 ஆண்டு இறுதிக்குள் திபெத்தை விட்டுச் சென்றது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]