குஜராத் வன்முறை 2002: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரு கட்டுரைகள் இணைப்பு
சி குஜராத் கலவரம், குஜராத் வன்முறை 2002 என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

02:24, 10 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்

வன்முறை சமயத்தில் அகமதபாத் நகரின் தோற்றம்

குஜராத் வன்முறை 2002 எனக் குறிப்பிடுவது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 2002 ம் ஆண்டு அம் மாநிலத்தின் சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களுக்கு எதிராக இந்து மதவெறியர்களால் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளையாகும். பெப்ரவரி 27,2002 கோத்ரா ரயில்நிலையத்தில் இந்து யாத்திரிகள் பயணம் செய்த தொடருந்துப்பெட்டி எரிக்கப்பட்டு 58 பேர் இறந்தசம்பவத்தை அடுத்தே குஜராத்தில் இந்து-முஸ்லிம்களுக்கிடையில் வன்முறை நிகழ்ந்தது.

கலவரத்தின் ஆரம்பம்

அயோத்தி பிரச்சனையின் ஒரு தொடராக இக்கலவரத்தை கருதலாம்.அயோத்தியில் நடந்த "தூண் தான" நிகழ்ச்யில கலந்துகொண்டு திரும்பிகொண்டிருந்த கரசேவகள் மீது இசுலாமிய தீவிரவாதிகள் தீ வைதனர்.இதில் 58 பேர் கோத்ரா எனும் இடத்தில் தொடர்வண்டியிலேயே கருகி உயிரிழந்தனர். இசுலாமியர்கள்தான் சபர்மதி விரைவு வண்டியை எரித்ததாக கூறப்பட்டது.[1]

கோத்ரா சம்பவம் நடந்த பின் அந்நகருக்கு வருகைதந்த முதல்வர் நரேந்திர மோடி பகிரங்கமாக இசுலாமியர்களை குற்றம்சாட்டினார். பிறகு சங்க பரிவாரங்களுடன் அரசும் இணைந்து மாநிலம் தழுவிய அடைப்பிற்கு அழைப்பு விடுத்தது. இந்தியாவின் உள்துறை அமைச்சர் அத்வானி வெளிநாட்டு சதி இருப்பதாக குற்றம் சாட்டினர். ஆனால் பா.ஜ.க. ஆட்சி செய்யும் நடுவண் அரசு மற்றும் மாநில அரசு தனது "சொந்த" (இரண்டாம் தர) மக்களை களையெடுக்கும் திட்டத்தை செயல்படுத்தினர். இதன் பின் ஏற்பட்ட கலவரத்தில் வீ.எச்.பீ. மற்றும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் சகாக்கள் இணைந்துகொண்டு இசுலாமியர்களை குறிவைத்து தாக்குதலை நடத்த தொடங்கினர். பெண்கள், குழந்தைக்கள் மற்றும் முதியவர்களையும் தங்களது இலக்குகளாக கொண்டு படுகொலை செய்ய தொடங்கினர்.தெஹல்கா ரிப்போர்ட்

சுமார் மூன்று நாட்கள் நடந்த இந்த படுகொலையில் குஜராத் அரசின் பங்கு குறிப்பிடத்தகுந்ததாகும். ஏனெனில் இசுலாமியர்களை பாதுகாக்க ஒரு துரும்பைக்கூட அரசு கிள்ளிபோடவில்லை. உச்ச நீதிமன்றமும் எதிர்கட்சிகளும் இணைந்து தங்களது எதிர்ப்பை காட்டவே பல வாரங்களுக்கு பின் கலவரம் முடிவுக்கு வந்தது. போலிசார் மற்றும் அரசு அதிகாரிகள் கலவரக்கரர்களுக்கு தேவையான அனைத்து "உதவிகளையும்"? செய்தனர்தெஹல்கா ரிப்போர்ட். நடுவண் அரசு தன் பங்கிற்கு மாநில அரசுக்கு இணையாக அமைதி காத்தது. சர்வதேச அளவில் இந்தியாவின் "மதச்சார்பற்ற அரசு?" விமர்சிக்கப்பட்டது. குஜராத் கலவங்களுக்கு பின் இந்தியாவில் இருக்கும் இசுலாமியர்களின் பாதுகாப்பு ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது.

படிமம்:Wid.jpg

பாதிப்புகள்

இந்திய மத்திய அரசின் தகவலின்படி இவ் கொடிய வன்முறையின் நிமித்தம் 790 முஸ்லிம்களும்,254 இந்துக்களும் கொல்லப்பட்டும்,2458 பேர் காயமடைந்தும் 223 பேர் காணாமலும் போயுள்ளதோடுமேலும்,பெண்கள் 919 விதவைகளாகவும் 606 சிறார்கள் அனாதைகளும் ஆக்கப்படுள்ளனர்.சுயாதீன மனித உரிமை கண்காணிப்பாளரகளின தரவுகளின்படி வன்முறையில் இறந்தோரின் எண்ணிக்கை 1000 ற்கு அதிகமென கூறப்பட்டுள்ளது அமெரிக்க காங்கிரஸ் சபையின் Congress Research Service (CRS) தகவலின் படி இவ்வெண்ணிக்கை 2000க்கும் அதிகமெனவும் இவற்றில் அதிகமானோர் முஸ்லிம்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இந்திய நடுவன் அரசு இவற்றையெல்லாம் மறுத்துள்ளது. வன்முறையில் வீடுகள்,கட்டிடங்கள் தீவைக்கப்பட்டதுடன், நபர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டும்,பெண்கள் கூட்டாக வன்புணர்ச்சிக்கும் உள்ளானார்கள்.

பின் விளைவுகள்

  1. கலவர வழக்குகளை விசாரித்த உச்ச நீதி மன்றம் மோடியை "நவீன நீரோ" என கடுமையாக விமர்சித்தது.
  2. இசுலாமியர்களின் ஆதரவை இனி இழக்க நேரிடும் என எண்ணிய பா.ஜ.க.வின் கூட்டணி கட்சிகள் அப்துல் கலாமை குடியரசு தலைவராக பரிந்துரைத்தன்.
  3. சர்வதேச அளவில் இந்திய அரசுக்கு நெருக்கடி தரப்பட்டது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகள் அதன் மனித உரிமை அமைப்புகள் கடுமையாக மோடி அரசை விமர்சித்தன.
  4. ஆஜ் தக தொலைக்காட்சியும், Tehalkaவும் இணைந்து நடத்திய புலன் விசாரணையில் மோடியின் கோர முகம் பகிரங்கமாக வெளிப்பட்டது. அதில், ஒரு கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து உள்ளே இருந்த குழந்தையை தீயில் எரித்ததையும் அகதமபாதில் உள்ள நரோடா எனும் இடத்தில சுமார் எழுபது பேர்களை கொன்ற பா.ஜ.க தலைவருக்கு மோடி ஆதரவு தெரிவித்ததையும் அவரது அமைச்சர் பாதுகாப்பு அளித்ததையும் பகிரங்கமாக வெளிப்படுத்தியது.[2][3]

உச்ச நீதிமன்றம் இதை ஒரு முக்கிய ஆதாரமாக எடுத்துகொண்டது என்பது குறிப்பிடத்தக்க விடயம்.

படிமம்:Wi.jpg

கோத்ரா சம்பவமும் சந்தேகங்களும்-உண்மைகளும்

மத்திய ரயில்வே துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட உண்மை அறியும் குழுவில் பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டன அதில் முக்கியமான ஒன்று

  1. மிக முக்கியமான தடயமான எரிந்த பெட்டி உடனுக்குடன் அப்புரப்படுதப்பட்டது ஏன்?
  2. கலவரத்தில் பயன்படுத்தப்பட எரிபொருளும், பெட்டியை எரிக்க உபயோகப்படுத்தப்பட்ட எரிபொருளும் ஒரே மாதிரியாக இருப்பது எப்படி?

மகாத்மா காந்தியை கொலைசெய்யும் பொழுது கொலைகாரனான கோட்சேவின் கையில் இஸ்மாயில் என பச்சை குத்திக் கொண்டான். அதே முறையை கோத்ரவிலும் சங்கபரிவாரங்கள் உபயோகப்படுதியிருக்கும் என்பது நியாயமான சந்தேகமாகும்.

ஆதாரங்கள்

  • தெஹல்கா இணைய தளத்தில் குஜராத் 2002 ஒரு தொகுப்பு [4]

மேற்கோள்கள்

  1. http://www.milligazette.com/gujarat/index.htm
  2. FrontLine March 29, 2002
  3. http://www.milligazette.com/gujarat/index.htm
  4. Babu Bajrangi's statement from Gujarat 2002 -The Truth Full coverage, Tehelka Magazine, Tehelka.com

வெளி இணைப்புகள்:

இவற்றையும் பார்க்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=குஜராத்_வன்முறை_2002&oldid=815146" இலிருந்து மீள்விக்கப்பட்டது