தாந்திரீகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Religious text primary}} |
|||
{{தலைப்பை மாற்றுக}} |
|||
[[Image:SriYantra construct.svg|thumb|right|150px|ஸ்ரீசக்கரம் எனப்படும் ஸ்ரீயந்திரம்]] |
[[Image:SriYantra construct.svg|thumb|right|150px|ஸ்ரீசக்கரம் எனப்படும் ஸ்ரீயந்திரம்]] |
||
[[File:Sri Chakra 3D.JPG|thumb|கல்லால் செதுக்கப்பட்ட ஸ்ரீசக்கரம், பராசக்தி கோயில், பொண்டியக், மிச்சிகன், அமெரிக்கா]][[Image:Sri Yantra 256bw.gif|thumb|right|150px|ஒன்பது முக்கோணங்களில் 43 சிறிய முக்கோணங்கள் கொண்ட ஸ்ரீயந்திரம் எனப்படும் ஸ்ரீசக்கரம்]] |
[[File:Sri Chakra 3D.JPG|thumb|கல்லால் செதுக்கப்பட்ட ஸ்ரீசக்கரம், பராசக்தி கோயில், பொண்டியக், மிச்சிகன், அமெரிக்கா]][[Image:Sri Yantra 256bw.gif|thumb|right|150px|ஒன்பது முக்கோணங்களில் 43 சிறிய முக்கோணங்கள் கொண்ட ஸ்ரீயந்திரம் எனப்படும் ஸ்ரீசக்கரம்]] |
18:43, 31 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்
இக் கட்டுரை முறையற்று, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சமய நூல்களை முதல்நிலை ஆய்வாகக் கொண்டு இரண்டாம் நிலை ஆய்வு அற்று உள்ளது. இதனை முறையாக பகுப்பாய்வு செய்து மேம்படுத்தவும். |
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
தந்திரம் அல்லது தாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள், வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர்[1] மற்றும் சுவேதாம்பர சமண சமயத்தினர் கடைப்பிடிக்கின்றனர்.
இந்து சமயத்தில் தாந்த்திரீக முறையில் வழிபட மந்திரங்கள் மிகவும் முக்கிய இடத்தை வகிக்கின்றது. இந்த தாந்திரீக மந்திரங்களில் மற்றவர்களின் மந்திரங்களைவிட இரண்டு முக்கியமான அம்சங்கள் உண்டு. அவை ”பீஜ மந்திரம்” (விதை போன்றது) என்றும் ”சக்தி மந்திரம்” என்றும் கூறப்படும். பீஜ மந்திரம் ஒரே ஓர் அசை மட்டும் கொண்ட சிறப்பான ஆன்மீக சக்தி கொண்டது. வெவ்வேறு வகையான கடவுளைக் குறிக்க வெவ்வேறு வகையான பீஜ மந்திரங்கள் உண்டு. தந்திர மார்க்கத்தில் ஒவ்வொரு மந்திரமுமே ஒர் பீஜ மந்திரத்துடன்தான் தொடங்கும்.
பீஜ மந்திரத்துடன் தொடர்புடைய மந்திரங்களே அதிக சக்தி உடையதாக கருதப்படுகிறது. ஒரு குருவின் மூலம் பெறப்பட்ட மந்திரத்தைத் திரும்பத் திரும்பக் கூறுவதால் இறைக்காட்சி கிட்டுவது எளிதாகும். அத்தோடு இத்தகைய மந்திர உச்சரிப்புக்களோடு இறைவனுக்குப் படைக்கப்படும் பொருள்களையும் இறைவன் உடனேயே ஏற்றுக் கொண்டுவிடுவதாகவும் நம்பப்படுகிறது.
யந்திரங்கள் தாந்திரீக வழிப்பாட்டோடு தொடர்புடையவை. அவை புனிதம் மிக்கதும் யோக சக்தி வாய்ந்தது. சில யந்திரங்கள் கடவுளின் அடையாளமாகக் குறிக்கப்பட்டு வழிப்படப்படுகிறது. எடுத்துக்காட்டு: ஸ்ரீசக்கரம் (தேவி யந்திரம்).
மேற்கோள்கள்
நூல் உதவி
- இந்து மதத்தின் மையக் கருத்து, நூலாசிரியர், சுவாமி பாஸ்கரானந்தர், சென்னை இராமகிருஷ்ண மடம் வெளியீடு.