ஆதிசக்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
சி File renamed: File:Sakthi under banyan tree.JPG → File:Jain goddess under banyan tree.jpg wrong identification |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[File:Parvathi, the wife of Siva..jpg|thumb|200px|right|எல்லோரா குடைவரையில் சத்தி <ref>நமக்குள் ஊறும் சத்து சக்தியாக மாறுகிறது</ref>புடைப்போவியம்]] |
[[File:Parvathi, the wife of Siva..jpg|thumb|200px|right|எல்லோரா குடைவரையில் சத்தி <ref>நமக்குள் ஊறும் சத்து சக்தியாக மாறுகிறது</ref>புடைப்போவியம்]] |
||
[[File: |
[[File:Jain goddess under banyan tree.jpg|thumb|right|200px|ஆலமர் செல்வன் என்பவன் சிவன். அவன் மனைவியாகிய இவளும் '''ஆலமர் செல்வி''' எல்லோரா குடைவரை]] |
||
'''ஆதிசக்தி''' என்பவர் [[சிவபெருமான்|சிவபெருமானின்]] [[சிவமனைவிகள்|மனைவியாவார்]]. இவர் ஆதிநாதரான சிவபெருமானின் இடப் பகுதி என்பதால் ஆதிசக்தி என்று அழைக்கப்படுகிறார். சக்தியை முழுமுதற்கடவுளாக வழிபடப்படும் சமயம் மிகப்பழமையான சமயங்களுள் ஒன்றான சாக்தம் ஆகும். தாய் தெய்வ வழிபாட்டின் மிகப்பெரும் எல்லையைக் கடந்துள்ள சக்தி வழிபாடானது, அகிலாண்டம் அனைத்திற்குமே ஆதிசக்தியே தாய் என்று உரைக்கிறது. இதனால் அகிலாண்டேசுவரி என்று ஆதிசக்தி அழைக்கப்படுகிறார். |
'''ஆதிசக்தி''' என்பவர் [[சிவபெருமான்|சிவபெருமானின்]] [[சிவமனைவிகள்|மனைவியாவார்]]. இவர் ஆதிநாதரான சிவபெருமானின் இடப் பகுதி என்பதால் ஆதிசக்தி என்று அழைக்கப்படுகிறார். சக்தியை முழுமுதற்கடவுளாக வழிபடப்படும் சமயம் மிகப்பழமையான சமயங்களுள் ஒன்றான சாக்தம் ஆகும். தாய் தெய்வ வழிபாட்டின் மிகப்பெரும் எல்லையைக் கடந்துள்ள சக்தி வழிபாடானது, அகிலாண்டம் அனைத்திற்குமே ஆதிசக்தியே தாய் என்று உரைக்கிறது. இதனால் அகிலாண்டேசுவரி என்று ஆதிசக்தி அழைக்கப்படுகிறார். |
||
05:13, 12 செப்டெம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்
ஆதிசக்தி என்பவர் சிவபெருமானின் மனைவியாவார். இவர் ஆதிநாதரான சிவபெருமானின் இடப் பகுதி என்பதால் ஆதிசக்தி என்று அழைக்கப்படுகிறார். சக்தியை முழுமுதற்கடவுளாக வழிபடப்படும் சமயம் மிகப்பழமையான சமயங்களுள் ஒன்றான சாக்தம் ஆகும். தாய் தெய்வ வழிபாட்டின் மிகப்பெரும் எல்லையைக் கடந்துள்ள சக்தி வழிபாடானது, அகிலாண்டம் அனைத்திற்குமே ஆதிசக்தியே தாய் என்று உரைக்கிறது. இதனால் அகிலாண்டேசுவரி என்று ஆதிசக்தி அழைக்கப்படுகிறார்.
முப்பெரும் தேவியரான கலைமகள், அலைமகள், மலைமகள் ஆகியோர் ஆதிசக்தியின் அம்சமாகவே இந்து தொன்மவியல் நூல்கள் உரைக்கின்றன. அத்துடன் திருமால் ஆதிசக்தியின் ரூபம் என்பதாலேயே மோகினி அவதாரம் எடுத்து சிவபெருமானுடன் ஐயப்பன் என்ற குழந்தையை பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
சொல்லிலக்கணம் மற்றும் பிற பெயர்கள்
இவர் அம்மன், ஆதிபராசக்தி, உமையம்மை என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
சக்தி அவதாரங்கள்
சிவபெருமான் அண்ட சராசரங்களை உண்டாக்குவதற்காக தன்னில் இடப்பக்கத்தினை சக்தியாக பிரித்தார். இவ்வாறு பிரிந்த சிவனை சேருவதற்காக ஆதிசக்தி தாட்சாயிணியாக அவதாரம் எடுத்தார். ஆனால் மாயையாலும், தட்சனின் மறுப்பாலும் யாகத்தில் விழுந்து மறித்தார். எனவே மீண்டும் பார்வதியாக அவதாரம் எடுத்து யோகம், ஞானம் என அனைத்திலும் சிறந்து விளங்கி சிவபெருமானை மணம் முடித்தார்.
பார்வதி, தாட்சாயினி, காளி, துர்கை என சிவனின் துணைகள் அனைத்தின் வடிவமாகவும் உமையம்மை கருதப்பெறுகிறார். இவருக்கு சக்தி என்றும் பெயருண்டு.
தாட்சாயிணி
பிரம்மாவின் மானசீக குமாரனான பிரஜாபதி தட்சனின் புதல்வியாக பூமியில் பிறந்தார். இவர் தாட்சாயிணி என்றும் சதி தேவி என்றும் அறியப்படுகிறார். சிவபெருமான் மீது காதல் கொண்டு பிரஜாபதியின் விருப்பத்தினையும் மீறி சிவபெருமானை திருமணம் செய்து கொண்டார். தனது தந்தையான பிரம்மதேவரின் ஐந்து தலைகளுள் ஒன்றை கொய்து நான்கு தலைகளாக மாற்றிய சிவபெருமான் மீது பிரஜாபதி தட்சன் கோபம் கொண்டிருந்தார். எனவே சதி தேவியார் சிவபெருமானை திருமணம் செய்தது கண்டு வெகுண்ட தட்சன் சிவபெருமானுக்கும், சதி தேவிக்கும் அழைப்பு விடுக்காமல் யாகம் ஒன்றை செய்தார். அங்கு அழைப்பின்றி வந்த சதி தேவியின் முன்னால் சிவபெருமானை தட்சன் அவமானம் செய்தமையால், சதி தேவியார் யாகக் குண்டத்திலே விழுந்து மறைந்தார். அதனால் தட்சனை அழிக்க சிவபெருமான் தன் சடாமுடியிலிருந்து வீரபத்திரனை தோற்றுவித்தார்.
சக்தி பீடங்கள்
பார்வதி தேவி
சிவபெருமானை சதி தேவியாக அடைய இயலாத ஆதி சக்தி, மீண்டும் பூமியில் பர்வதராஜன் [[மைனாகுமாரி] தம்பதிகளுக்கு மகளாக பிறந்தார். இவர் பார்வதி தேவி என்று அறியப்படுகிறார். மிகக் கடுமையாக தவமிருந்து யோகசத்திகளை பெற்று சிவனை மணந்தார். சிவன் பார்வதி தம்பதியரின் முதல் குழந்தையாக விநாயகர் அறியப்படுகிறார். கயிலை மானோசரோவரில் பார்வதி தேவியார் குளிக்க செல்லும் பொழுது மானசீகமாக ஒரு குழந்தையை உருவாக்கி காவலுக்கு வைத்தார். அங்கு வந்த சிவபெருமானை தந்தை என அறியாது அக்குழந்தை சண்டையிட சிவன் அக்குழந்தையின் தலையை கொய்தார். பின் பார்வதி குழந்தையை காத்தருள வேண்டவே, சிவபெருமான் தனது பூத கணங்களிடம் முதலில் தென்படும் விலங்கின் தலையை கொண்டுவரும்படி ஆனையிட்டார். சிவ பூத கணங்களும் யானை தலையை கொண்டுவந்தன. சிவபெருமான் அதை அக்குழந்தைக்கு அளித்து உயிர்ப்பித்தார். அதனால் ஆனைமுகன் என்று பெயர் பெற்றார். சிவ கணங்களின் அதிபதியாக ஆனைமுகன் விளங்கியமையால் கணபதி என்றும் அறியப்படுகிறார்.
சிவன் பார்வதி தம்பதியரின் இரண்டாவது குமாரன் முருகன் ஆவார். சிவபெருமான் தனது ஆறு முகங்களிலும் உள்ள நெற்றிக் கண்களிலி்ருந்து நெருப்புபொறிகளை தோற்றுவித்தார். அதனை வாயு தேவன் சரவணப்பொய்கை நதியில் சேர்ப்பித்தார். அந்நதியில் நெருப்பு பொறிகள் ஆறு குழந்தைகளாக ஆனது. அக்குழந்தைகளை கார்த்திகைப் பெண்கள் அறுவர் வளர்த்தனர். அன்னையாகிய பார்வதி தேவி அந்த ஆறு குழந்தைகளை அனைத்த பொழுது ஆறுமுகமும், பன்னிரு கரமும் கொண்ட குமாரனாக அக்குழந்தை ஒன்றினைந்தது. ஆறு முகங்களை உடையதால் ஆறுமுகம் என்றும் கார்த்திகைப் பெண்கள் வளர்த்தமையால் கார்த்திக்கேயன் என்றும், அழகான குழந்தை என்பதால் முருகன் என்றும் அறியப்படுகிறார். சிவபெருமானும் பார்வதியும் கயிலையில் மனம் மகிழ்ந்திருந்த பொழுது கரடி ரூபம் கொண்டு கயிலை காடுகளில் மகிழந்ததாகவும், அதனால் சிவரூபமான ஜாம்பவான் பிறந்ததாகவும் கூறப்படுகிறது.
மீனாட்சி
மீனாட்சி என்பவர் பாண்டிய மாமன்னன் மலையத்துவஜன் மற்றும் காஞ்சனமாலை தம்பதியரின் மகளும் சிவபெருமானின் உருவமான சுந்தரேசரரின் மனைவியும் ஆவார். இவர் தடாதகை பிராட்டி எனவும் அறியப்படுகிறார். இவர் மிகுந்த வீரம் கொண்டவராகவும், தந்தையின் இறப்பிற்குப் பிறகு பாண்டிய நாட்டிலிருந்து படை திரட்டி கையிலை வரை சென்று வென்றதாகவும் திருவிளையாடல் புராணம் கூறுகிறது. கையிலையில் சிவபெருமானை கண்டு வெட்கம் கொண்டு பெண் நிலையை அடைந்ததால் சிவபெருமானையே சுந்தரேசுவரராக திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
பார்வதி
துர்க்கை
காளி
கடவுளுடனான உறவு
திருமால்
ஆதிசக்தியின் சகோதரனாக திருமால் போற்றப்படுகிறார்.
நந்தி தேவர்
சிவபெருமான் முதல் தொண்டனான நந்தி தேவர், ஆதிசக்தியின் மகனுக்கு இணையானவராக கூறப்படுகிறது.
சக்தி விழாக்கள்
நவராத்திரி
ஹோலி
துர்க்கை பூஜை
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
சக்தி விரதங்கள்
ஆடி விரதம்
வெள்ளிக்கிழமை விரதம்
காமாட்சி அம்மன் விரதம்
பச்சைப் பட்டினி விரதம்
கேதாரகௌரி விரதம்
திருவாதிரை நோன்பு
சக்தி கோயில்கள்
இவற்றையும் காண்க
ஆதாரங்கள் மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
அடிக்குறிப்பு
- ↑ நமக்குள் ஊறும் சத்து சக்தியாக மாறுகிறது