வேதாந்த சூடாமணி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய ஏகாத்மவாத நூல். இஃது ஆன்மா ஒன்றே அழிவில்லாதது என்னும் அடிப்படைக் கொள்கையை எடுத்து விளக்குகிறது. இஃது ஒரு மொழிபெயர்ப்பு நூல். அருமையின் பொருளை விளக்குகிற விவேகசிந்தாமணியுள் கூறப்பட்ட வேதாந்தப் பொருளை இந்நூல் விரித்துரைக்கின்றது. இதனை வேதாந்த சூனாமணி என்றும் வழங்குவர்.
விவேகசிந்தாமணி யெனும் நூலதனுள் எடுத்தியம்பும் வேதாந்தப் பரிசேதப் பொருளை நேர் கொண்ட தமிழ் விருத்த யாப்பதனால் தெரிய நிகழ்த்து வேண்ட வேதாந்த சூடாமணி என்று (3) எனப் பாயிரம் கூறுகின்றது. பாயிரம் முன்று பாடல்கள் உட்பட 185 பாடல்களால் ஆனது இந்நூல்.