வி. பி. இராமன்
வெங்கட்ட பட்டாபிராமன் | |
---|---|
தமிழக அரசுத் தலைமை வழக்குரைஞர் | |
பதவியில் 1977–1979 | |
முன்னையவர் | கே. பராசரன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இந்தியா, தமிழ்நாடு, சென்னை | 3 அக்டோபர் 1932
இறப்பு | 2 திசம்பர் 1991 தமிழ்நாடு, சென்னை | (அகவை 59)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
பிள்ளைகள் | மோகன் ராமன், பி. எஸ். இராமன், பி. ஆர். இராமன் |
முன்னாள் கல்லூரி | இலயோலாக் கல்லூரி, சென்னை, சென்னை சட்டக் கல்லூரி |
வேலை | வழக்கறிஞர் |
தொழில் | மாநில அரசுத் தலைமை வழக்குரைஞர் |
வெங்கட்ட பட்டாபிராமன் (Venkata Pattabhi Raman) (3 அக்டோபர் 1932 - 2 திசம்பர் 1991) என்பவர் ஒரு இந்திய வழக்கறிஞரும் அரசியல்வாதியும் ஆவார், இவர் 1977 முதல் 1979 வரை தமிழகத்தின் அரசு தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார். இவரது மகன் மோகன் ராமன் ஒரு புகழ்பெற்ற நடிகர்.
ஆரம்பகால வாழ்க்கை[தொகு]
இராமன் 1932 அக்டோபர் 3 அன்று சென்னையில் பிறந்தார், சர்ச் பார்க் பள்ளியியல் பள்ளிப்படிப்பை முடித்தார். பள்ளிப்படிப்பு முடிந்ததும், இராமன் லயோலா கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்றார். மேலும் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார், தங்கப் பதக்கத்துடன் தனது படிப்பை முடித்தார்.
அரசியல்[தொகு]
துவக்கத்தில், இராமன் பொதுவுடமை இயக்கத்தை நோக்கி ஈர்க்கப்பட்டார். எனினும், இவர் 1955இல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். மேலும் கட்சியின் சட்டதிட்டங்களை ஈ. வெ. கி. சம்பத் மற்றும் இரா. செழியன் ஆகியோரிடன் இணைந்து உருவாக்கினார்.
குறிப்புகள்[தொகு]
- [1]
- [2][தொடர்பிழந்த இணைப்பு]
- [3] பரணிடப்பட்டது 2009-08-04 at the வந்தவழி இயந்திரம்