விஜய் பட்கர்
விஜய் பட்கர் பத்ம பூசண், பத்மசிறீ | |
---|---|
![]() | |
பிறப்பு | விஜய் பாண்டுரங்க பட்கர் 11 அக்டோபர் 1946[1] முரம்பா, அகோலா மாவட்டம், மகாராட்டிரம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் |
|
அறியப்படுவது | பரம் வரிசை மீத்திறன் கணினிகளின் சிற்பி |
வாழ்க்கைத் துணை | இலலித் பட்கர் |
பிள்ளைகள் | சம்கிதா பட்கர், நசிகேதாசு பட்கர் மற்றும் தைஜாசா பட்கர் |
விருதுகள் |
|
வலைத்தளம் | |
www |
விஜய் பட்கர் (Vijay P. Bhatkar) ஒரு இந்திய கணினி விஞ்ஞானி, தகவல் தொழில்நுட்ப தலைவர் மற்றும் கல்வியாளர் ஆவார். அவர் பரம் மீத்திறன் கணினிகளின் வளர்ச்சிக்கு வழிவகுத்தார்.[2] அவர் மகாராஷ்டிரா பூஷண், பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் விருது பெற்றவர். இந்திய கணினி பத்திரிகை டேட்டா கிவிஸ்ட் அவரை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையை வடிவமைத்த நட்சத்திர முன்னோடிகளில் வைத்துள்ளது. அவர் சி-டாக்கின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார். தற்போது இந்தியாவிற்கான வளரும் சூப்பர் கம்ப்யூட்டர் திட்டத்தில் பணிபுரிகிறார்.
2017 ஜனவரி முதல் இந்தியாவின் நலாந்தா பல்கலைக் கழகத்தின் அதிபராக நியமிக்கப்பட்டார். இதற்கு முன்னர் ஐஐடி தில்லியின் கவர்னர் வாரியத்தின் தலைவராக 2012 முதல் 2017 வரை பணியாற்றினார்.
பிறப்பு[தொகு]
விஜய் பட்கர் இந்தியாவில் மகாராஷ்டிராவில் உள்ள அகோலா மாவட்டத்தில் முரும்பாவில் 1946 அக்டோபர் 11 இல் பிறந்தார்.
படிப்பும் பட்டங்களும்[தொகு]
1965 ஆம் ஆண்டில் விஸ்வேஸ்வரயா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற பொறியியல் கல்லூரியில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றார். 1968 ஆம் ஆண்டில் மஹாராஜா சயாஜிராவோ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றார். 1972 ஆம் ஆண்டில் டெல்லியிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்திலிருந்து பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார். 2011 ஆம் ஆண்டில் பாட்டீல் பல்கலைக் கழகத்திலிருந்து கெளரவ டாக்டர் பட்டம் பெற்றார்.2014 ஆம் ஆண்டில், குஜராத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திலிருந்தும் கெளரவ டாக்டர் பட்டம், பெற்றார்.
இவர் ஆற்றிய பணிகள்[தொகு]
அவர் 1991 ஆம் ஆண்டில் முதல் இந்திய மீத்திறன் கணினி, பரம் 8000, பின்னர் 1998 இல் பரம் 10000 ஆகியவற்றை உருவாக்கினார்.
ஜனவரி 2017 ல், டாக்டர் பாட்கர் நலாந்தா பல்கலைக்கழகத்தின் அதிபராக நியமிக்கப்பட்டார். இதற்கு முன்னர் ஐஐடி-டெல்லியின் கவர்னர் குழுவின் தலைவர். இந்தியாவில் 6,000 க்கும் அதிகமான விஞ்ஞானிகளான விஞ்ஞான பாரதியின், தேசிய அறிவியல் தலைவராக உள்ளார்.பாட்கர் 12 புத்தகங்கள் மற்றும் 80 தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி ஆவணங்களை எழுதியுள்ளார். பல பல்கலைக் கழகங்களின் பட்டமளிப்பு விழாவில், சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் உரையாற்றுகிறார்.
விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்[தொகு]
- பத்ம பூஷன் (2015)[3]
- ராமானுஜாஅறக்கட்டளை விருது (2007)
- FICCI விருது (1983)
- பீட்டர்ஸ்பர்க் பரிசு (2004)
- பத்மஸ்ரீ விருது(2000)
- பிரியதர்ஷினி விருது (2000)
- தேசிய ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவன (NRDC) விருது (1984-85)
- இந்திய ஜியோ-டெக்னிக் அமைப்பின் தங்க பதக்க விருது (1976)
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Distinguished Alumni - Shri Vijay Pandurang Bhatkar". msubaroda.ac.in. மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம்.
- ↑ "The Little Known Story of How India's First Indigenous Supercomputer Amazed the World in 1991". The Better India. 13 January 2017. http://www.thebetterindia.com/82076/india-first-supercomputer-param-cdac-vijay-bhatkar/.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. 15 நவம்பர் 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 21 July 2015 அன்று பார்க்கப்பட்டது.
- "Architect of India’s first supercomputer 'Param' to head Nalanda University". DNA. 28 January 2017. Retrieved 3 July 2017.
- "NVIDIA, IIT collaborate to develop supercomputer". Rediff.com. December 22, 2012. Retrieved 3 July 2017.
- http://timesofindia.indiatimes.com/city/patna/man-behind-indias-first-supercomputer-param-to-head-nalanda-university/articleshow/56822144.cms
- "IIT-Delhi: Scientist Vijay Bhatkar to head the board of governors - Times of India". The Times of India. May 3, 2012. Retrieved 3 July 2017.
- "APJ Abdul Kalam to confer honorary doctorate to Ujjwal Nikam". DNA. 17 May 2011. Retrieved 3 July 2017.
- "GTU honours 143 with gold medals". Ahmedabad Mirror. January 17, 2014. Retrieved 3 July 2017.